மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் புதனன்று (ஜூலை 17) சென்னையில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. பாலபாரதி தலைமையில் நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.