tamilnadu

img

எளிய மக்களின் குரலை சட்டமன்றத்தில் ஒலித்ததற்காக எம்.சின்னதுரை எம்எல்ஏ-வுக்கு பாராட்டு

எளிய மக்களின் குரலை சட்டமன்றத்தில் ஒலித்ததற்காக எம்.சின்னதுரை எம்எல்ஏ-வுக்கு பாராட்டு

எளிய மக்களின் குரலை சட்டமன்றத்தில் ஒலித்ததற்காக கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரையை உடையநேரி காலனி மக்கள் பாராட்டினர். புதுக்கோட்டையை அடுத்த உடையநேரி காலனியில் வசிக்கும் மக்களுக்கு பல ஆண்டுகளாக பட்டா வழங்கப்படவில்லை. மின்சாரம், தெருவிளக்கு உள்ளிட்ட  அடிப்படை வசதிகளும் செய்துதரப்படவில்லை. தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும் எனவும், அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உடையநேரி காலனி மக்களின் மேற்படி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான எம்.சின்னதுரை பேசினார். தங்களது கோரிக்கைகளை சட்டமன்றத்தில் பேசியதற்காகவும், கோரிக்கைகளை நிறைவேற்ற தொடர்ச்சியான முயற்சிகளை எடுக்க வலியுறுத்தியும், உடையநேரி காலனி மக்கள் ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரையை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில், கட்சியின் மாவட்டச் செயலளார் எஸ்.சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் டி.சலோமி, துரை.நாராயணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எல்.வடிவேல், டி.லட்சாதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.