புதுதில்லி, மார்ச் 29- எல்ஐசி மற்றும் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்க ளில் ஓய்வு பெற்ற ஓய்வூதி யர்களுக்கும், குடும்ப ஓய்வூ தியர்களுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பொதுத்துறை வங்கிகளில் மாற்றியமைத்தி ருப்பது போல் ஓய்வூதி யத்தை உயர்த்தி நிர்ணயம் செய்யுமாறு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்க ளவை உறுப்பினர் பி.ஆர். நட ராஜன் கோரினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற நடத்தை விதி 377ஆவது பிரி வின்கீழ் அவசரப் பொது முக் கியத்துவம் வாய்ந்த பிரச்ச னைகளை எழுப்பும் நேரத் தில் பி.ஆர்.நடராஜன் பேசிய தாவது: எல்ஐசி மற்றும் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்க ளுக்கு 1995ஆம் ஆண்டு ஓய் வூதியத் திட்டம், 1986 ஜன வரி1 தேதியிட்டு அமல்படு தப்பட்டது. 1996 ஜனவரி 1க்குப்பின் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் ஊதிய மாற் றம் செய்யும் போதெல்லாம் இவர்களின் ஓய்வூதியத்தில் குறிப்பாக முந்தைய ஆண்டுகளில் ஓய்வு பெற்ற வர்களுக்கு ஊதிய உயர் வுக்கேற்ப ஓய்வூதியம் அளிக்கப்படவில்லை. அவர் கள் ஓய்வு பெற்றபோது என்ன ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட் டதோ அதனைத்தான் பெற்று வருகிறார்கள்.
குடும்ப ஓய்வூதியம், ஊழி யர் ஓய்வுபெறும்போது பெற்ற ஊதியத்தில் 15 விழுக் காடு விகிதத்தில் நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது அவர்களுக்கு அளிக்கப் படும் அற்பத்தொகை அவர் கள் தங்கள் குடும்பத்தை நிர்ணயிக்கப் போதுமான தாக இல்லை. பல்வேறு இயக்க நடவ டிக்கைகளுக்குப்பின், எல்ஐசி நிர்வாகம் குடும்ப ஓய்வூதியத்தை 30 விழுக் காடாக உயர்த்த ஒப்புக் கொண்டது. இதுதொடர்பாக எல்ஐசி நிர்வாகத்தின் பரிந் துரை, ஒன்றிய அரசுக்கு 2019 செப்டம்பரில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆயினும் இதன்மீது அரசாங்கம் இது வரை எவ்வித முடிவும் எடுக் காது இப்பிரச்சனை நிலுவை யில் இருந்து வருகிறது. இதே பிரச்சனைமீது இந்திய ரிசர்வ் வங்கியிலும், பொதுத்துறை வங்கி களும் தீர்வு காணப்பட்டு அவர்களுக்கு ஓய்வூதி யங்கள் அளிக்கப்படு கின்றன. ஆயினும் இன்சூ ரன்ஸ் துறையில் மட்டும் இன் னமும் இப்பிரச்சனை நிலு வையில் இருந்து வருகிறது. இது தொடர்பாக அவர் கள் இயக்க நடவடிக்கை களில் ஈடுபட இருக்கிறார்கள். இந்தப்பிரச்சனையில் ஒன்றிய அரசாங்கம் உட னடியாகத் தலையிட்டு, சாத்தியமான அனைத்து உதவிகளையும் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக் கும், குடும்பத்தினருக்கும் அளித்திட வேண்டும் என்றும் அதன்மூலம் இன்சூரன்ஸ் ஓய்வூதியர்களுக்கு நியா யம் வழங்க வேண்டும் என் றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு பி.ஆர்.நட ராஜன் பேசினார். (ந.நி.)