விசைத்தறியாளர்கள் போராட்டம்: கடையடைப்பு நடத்த அழைப்பு
திருப்பூர், ஏப்.13- சட்டப் பாதுகாப்புடன் நியாய மான முறையில் நெசவு கூலி உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்ற வலி யுறுத்தி விசைத்தறியாளர்கள் நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து வருகிறது. அடுத்த கட்டமாக வரும் செவ் வாயன்று (நாளை) விசைத்தறியா ளர்களின் கோரிக்கைக்கு ஆதர வாக கடையடைப்பு போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. கோவை, திருப்பூர் மாவட் டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு கூலி உயர்வு வழங்குவது என ஜவுளி வியாபாரிகளுடன் ஒப்பந்தம் காணப்பட்டது. எனினும் அந்த ஒப்பந்தத்தை மீறி, ஜவுளி வியாபாரி கள், விசைத்தறி உரிமையாளர்க ளுக்கு நெசவு கூலியை குறைத்து விட்டனர். இதுகுறித்து தொடர்ந்து கோரிக்கை வைத்தும், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த 2024 ஆம் ஆண்டு ஜன.12 ஆம் தேதி முதல் கூலிக்கு நெசவு செய்யும் விசைத் தறி உரிமையாளர்கள் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த இடைப்பட்ட 15 மாத காலத்தில் 16 முறை பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. அத் துடன் சோமனூர் மற்றும் தெக்கலூ ரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங் கள் நடத்தப்பட்டன. கடந்த பிப் ரவரி 14-ஆம் தேதி முதல் கிரா மப்புறங்களில் விசைத்தறிக்கூடங் களில் கருப்புக் கொடி ஏற்றியும் தங் கள் எதிர்ப்பை பதிவு செய்து வந் தனர். கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் பேச்சு வார்த்தைக்கு அழைத்த போதும் ஜவுளி வியாபாரிகள் வர மறுத்து கூலி உயர்வு தர மறுக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் 19ஆம் தேதி முதல் இரண்டு மாவட்டங்களிலும் சாதா தறி உரி மையாளர்கள் காலவரையற்ற உற் பத்தி நிறுத்த போராட்டத்தையும் அறிவித்து நடத்தி வருகின்றனர். 25 நாட்களாக வேலை நிறுத் தம் நடைபெற்று வருகிறது. இதற் கிடையே தொழிலாளர் துறை மூலம் ஆட்சியர் முன்னிலையில் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. இதிலும் உடன்பாடு காணப் படவில்லை. எனவே கடந்த 11ஆம் தேதி முதல் சோமனூர் கருமத்தம்பட்டி சாலையில் ஐந்து நாட்களுக்கு உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்துவது என்றும் அறிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். மூன்று நாட்களாக நடை பெற்ற உண்ணாவிரதப் போராட் டங்களில் ஒவ்வொரு நாளும் ஆயி ரக்கணக்கானோர் கலந்து கொண் டுள்ளனர். தொடர்ந்து ஏப்ரல் 15 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த உண்ணாவிரத போராட் டத்தின் ஒரு பகுதியாக ஏப்ரல் 15 செவ்வாய் அன்று விசைத்தறியா ளர்களின் நியாயமான கோரிக்கை போராட்டத்திற்கு ஆதரவாக ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தவும் விசைத்தறியாளர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் சோமனூர் பகுதி வியாபாரிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள் ளது. குறிப்பாக, சாமளாபுரம், கார ணம்பேட்டை, சோமனூர், கருமத் தம்பட்டி, தெக்கலூர், புதுப்பாளை யம், அவிநாசி, பெருமாநல்லூர், கண்ணமநாயக்கன்பாளையம் மற் றும் பல்லடம் ஒன்றியம் கிராமப் புற பகுதிகள் உள்ளிட்ட சாதா விசைத்தறி தொழில் நடைபெறக் கூடிய மையங்களில் அனைத்து வியாபாரிகளும் விசைத்தறியாளர் கள் போராட்டத்திற்கு ஆதரவாக ஒரு நாள் கடையடைப்பு நடத்தி ஒத் துழைப்பு வழங்கும்படி கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் கள் சங்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
ஒகேனக்கல்: கட்டணம் கேட்டு மிரட்டும் ஊழியர்கள்
ஒகேனக்கல் சுற்றுலா மையத்தில் புனரமைக்கப்பட்ட வண்ணமீன் காட்சி யக வளாகத்திற்குள் ஓய்வு எடுக்கும் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் கேட்டு ஊழியர்கள் மிரட்டும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலாத் தளம் சர்வதேச அளவில் தரம் உயர்த்த நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என தமிழக அரசு அறி விக்கை செய்யப்பட்டதை தொடர்ந்து, மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வரு கிறது. ஒகேனக்கல் மேம்பாட்டு நிதி யில் வண்ணமீன் காட்சியகம் கடந்த 2008 ஆ-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதனிடையே, பழுதடைந்த வண்ண மீன் காட்சியகம் ஒகேனக்கல் மேம் பாட்டு நிதி மற்றும் தருமபுரி மாவட்ட மேம்பாட்டு மீன்வளர்ப்போர் மேம் பாட்டு முகமையின் கீழ், ரூ.23.32 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு, கடந் தாண்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த காட்சியகத்தில் 40 கண்ணாடித் தொட்டி களிலும் கண்ணை கவரும் வகையில் தங்கமீன், அரவானா, கௌராமி, பிள வர் ஹார்ன், லோச், மோலி, கப்பி, பிளாட்டி, ஆஸ்கர், பார்ப், டெட்ரா, ஏஞ் சல் மீன், டிஸ்கஸ், பிளவர் ஹார்ன், புலி சுறா, கோய், கிளி மீன், சிசிலிட், ஸீப்ரா மீன் போன்ற மீன்கள் காட்சிபடுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில், வண்ணமீன் காட்சி யகத்தின் முன்புற வளாகத்தில் சுற்று லாப் பயணிகள் ஓய்வு எடுக்கும் வகை யில் சிமென்ட் சேர்கள் போடப்பட்டுள் ளது. தற்போது கோடைக்காலம் என்ப தால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பேருந்து ஓட்டுநர்கள், அந்த வளாகத்தில் உள்ள மரக்கிளையின் அடி யில் அமர்ந்து ஓய்வு எடுத்து வந்தனர். இதனை பார்த்த அருங்காட்சிய ஊழி யர்கள், ஒருமையில் பேசி இங்கு அமர்ந் தால் கட்டணம் வசூலிக்கப்படும் என எச்சரித்துள்ளனர். இதற்கு உள்ளூர் பொதுமக்கள் ஊழியர்களுக்கு ஆதர வாக, ஓட்டுநர்களை தாக்க முயலும் வீடியோ தற்போது சமூக வலைதலங் களில் பரவி வைராகி வருகிறது. ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏற் கனவே பேருந்து நுழைவு கட்டணம், நிறுத்தும் இடம், படகு சவாரி, கடைக ளில் அதிக விலை உள்ளிட்டவைக ளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற் போது சுற்றுலாப் பயணிகள் அமருவதற் கும் கட்டணம் கேட்டு துன்புறுத்துவது வேதனையாக இருந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தல்
தருமபுரி, ஏப்.13- வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியு றுத்தி, தருமபுரியல் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற் றது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, நாடாளு மன்றத்தில் வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, தற்போது அமலுக்கு வந்துள்ளது. இஸ்லாமியர்களுக்கு எதி ரான இந்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும், என வலியுறுத்தி தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை சார்பில், தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஞாயிறன்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் பஜ்லே கரீம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஹபிபுல்லா வர வேற்றார். மாநில ஜமாத்துல் உலமா சபை உறுப்பினர் அப்துல் லதீப் பாகவி, திமுக கிழக்கு மாவட்டச் செயலா ளர் ஆ.மணி எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் என்.சுபேதார், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் மைய மாவட்டச் செயலாளர் த.கு.பாண்டி யன், திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயரா மன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் அன் வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.