tamilnadu

img

சிபிஎம் பெண் உறுப்பினர்களுக்கு அரசியல் பயிலரங்கம்

சிபிஎம் பெண் உறுப்பினர்களுக்கு  அரசியல் பயிலரங்கம்

திருச்சிராப்பள்ளி, ஜுன் 24-  திருச்சி புறநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்  உறுப்பினர்களுக்கான அரசியல் பயிலரங்கம், செவ்வாயன்று வெண்மணி இல்லத்தில் நடந்தது. பயிலரங்கத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் மல்லிகா தலைமை வகித்தார். `கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் பெண்கள்’ என்ற தலைப்பில் புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன், `வகுப்புவாத சவால்கள்’ என்ற தலைப்பில் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் எஸ். ஸ்ரீதர், `சரிபாதி பெண்களை சம பலத்தில் திரட்டுவோம்’ என்ற தலைப்பில் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி ஆகியோர் பேசினர். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கோமதி, நித்யா, நஸ்ரின்பானு மற்றும் விசாலாட்சி, கவிதா, இன்குலாப், கே. மல்லிகா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.