tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஓடும் ரயிலில் தங்க நகைகள் அடங்கிய கைப்பையை  தவற விட்ட பெண்  பத்திரமாக மீட்டுக் கொடுத்த காவல்துறையினர்

தஞ்சாவூா், ஏப்.29-  திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சவுக்குப் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அருள் பிரகாஷ் என்பவரது மனைவி சுகன்யா(32), தனது உறவினர்களுடன் திங்கள்கிழமை தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் முன்பதிவு இல்லாத அந்தியோதயா ரயிலில் ஏறி கும்பகோணத்திற்கு புறப்பட்டார்.  செவ்வாய்க்கிழமை அதிகாலை கும்பகோணம் வந்ததும் ரயிலில் இருந்து இறங்கினார். பின்னர், பேருந்து நிலையம் செல்வதற்காக ஆட்டோவில் ஏற முயன்றார். அப்போது, தான் கொண்டு வந்திருந்த கைப்பையை காணாததால் அதிர்ச்சியடைந்தார். அந்தக் கைப்பையில் 17 கிராம் தங்க நகைகள்,  340 கிராம் எடையுள்ள 3 ஜோடி கொலுசு, செல்போன், டேப் மற்றும் ரூ.565 ரொக்கம் ஆகியவை இருந்தன. இதுகுறித்து சுகன்யா, கும்பகோணம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள், உடனடியாக தஞ்சாவூர் ரயில்வே இருப்பு பாதை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், உதவி ஆய்வாளர் பாஸ்கரன், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துலட்சுமி ஆகியோர் சுகன்யா பயணம் செய்த அந்தியோதயா ரயில் தஞ்சாவூர் வந்து நின்றபோது அதில் ஏறி சோதனை செய்தனர். அதில் சுகன்யா தவறவிட்ட நகைகளுடன் கூடிய கைப்பையை பத்திரமாக மீட்டனர். பின்னர், அவரை தஞ்சாவூருக்கு வரவழைத்து கைப்பையை வழங்கினர். ரயிலில் பயணம் செய்யும்போது பயணிகள் தங்கள் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.

பாலருவி எக்ஸ்பிரசில்  கூடுதல் முன்பதிவு பெட்டிகள் இணைக்கப்படுமா?  பயணிகள் எதிர்பார்ப்பு

திருநெல்வேலி, ஏப்.29- தூத்துக்குடியில் இருந்து பாலக்காட்டிற்கு இயக்கப்படும் பாலருவி எக்ஸ் பிரசில் கூடுதல் முன்பதிவு பெட்டிகளை இணைக்க வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.        பாலக்காடு - நெல்லை இடையே பாலருவி எக்ஸ் பிரஸ் ரயில் வெகுகாலமாக இயக்கப்பட்டு வருகிறது. நெல்லையில் இருந்து செங்கோட்டை, புனலூர், கொல்லம், எர்ணாகுளம் வழியாக கேரளாவின் கடைசி எல்கையான பாலக்காடு செல்வோருக்கு இந்த ரயில் வசதியாக உள்ளது. இரவு நேரத்தில் இயக்கப்படும் இந்த ரயிலை அதிக அளவிலான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் இந்த ரயிலை தூத்துக்குடி வரை நீட் டிப்பு செய்ய வேண்டும் என்கிற பயணிகளின் கோரிக்கையை ஏற்று இந்த ரயில் சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு நீட்டிக்கப்பட்டது. பாலருவி எக்ஸ்பிரஸ் தற்போது 18 பெட்டிகளோடு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் அதிக முன்பதிவற்ற பெட்டிகள் இருப்பதால், முன்பதிவு பயண சீட்டுகள் விரைவில் முடிந்து விடுகின்றன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கேரளாவின் வெகு தொலை தூரத் திற்கு பயணிப்பவர்கள், முன்பதிவு பெட்டிகளில் இடம் கிடைக்காமல் திண் டாடுகின்றனர். மேலும் தொலை தூர பயணங்களுக்கு முன்பதி வற்ற பெட்டிகளை விட, முன்பதிவு பெட்டிகளே வசதியாக இருப்பதால், அந்த ரயிலில் முன்பதிவு பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.