லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காலியாகவுள்ள மறு ஆய்வு அலுவலர்கள் (ஆர்ஓ), துணை மறு ஆய்வு அலுவலர்கள் (ஏஆர்ஓ) பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு டிசம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் மூன்று வேளைகளில் நடத்தப்படும் என உத்தரப்பிர தேச மாநில அரசு பணியாளர் தேர்வாணை யம் (யுபிபிஎஸ்சி) நவம்பர் 5-ஆம் தேதி அறி வித்தது. அதேபோல பிராந்திய குடிமைப் பணி (பிசிஎஸ்) தேர்வு டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் இரு வேளைகளில் நடத்தப் படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த இரு தேர்வுகளும் இரண்டு நாள்கள் இரண்டு, மூன்று வேளைகளாக நடத்தப்படுவதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து பட்டதாரி இளை ஞர்களான தேர்வர்கள் திங்களன்று அலகா பாத்தில் உள்ள யுபிபிஎஸ்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 15,000 இளைஞர்கள் பங்கேற்ற இந்த போராட்டத்தால் அலகாபாத் நகர சாலைகள் முடங்கின. அசம்பாவிதத்தை தடுப்ப தாக கூறி உத்தரப்பிரதேச போலீசார் அமைதியாக போராட்டம் நடத்திய இளை ஞர்கள் மீது தடியடி நடத்தினர். இளைஞர்கள் மீதான தடியடிக்கு சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் என நாடு முழுவதும் கண்டனங்களை எழுப்பியுள்ளன. இந்நிலையில், இளைஞர்கள் மீதான தடியடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாறுபட்ட தேர்வு முறை அறிவிப்பை யுபிபி எஸ்சி ரத்து செய்யக் கோரியும் இளை ஞர்கள் செவ்வாயன்று 2ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்நாள் நடை பெற்ற போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து மாநிலம் முழுவ தும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அல காபாத்தில் திரண்டு பாஜக அரசிற்கு எதிராக போராட்டம் நடத்தினர். அலகாபாத் மட்டு மின்றி மாநிலம் முழுவதும் செவ்வாயன்று இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் லக்னோ, அலகாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.