போராடும் மாற்றுத் திறனாளிகளை கைது செய்து போலீஸ் அராஜகம்!
சிபிஎம் மாநில செயற்குழு கண்டனம்
சென்னை, ஏப்.22- மாற்றுத் திறனாளிகள் மீதான காவல்துறையின் அராஜகத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்ட னம் தெரிவித்துள்ளது. மத்தியக் குழு உறுப்பினர் கே. பால பாரதி தலைமையில் நடைபெற்று வரும், கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பாக நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டி ருப்பதாவது: 'போராடினால் அடக்குமுறையா?' நியாயமான கோரிக்கைகளுடன் போராட, சென்னைக்கு புறப்பட்டு வர இருந்த மாற்றுத் திறனாளிகளை ஆங் காங்கே வீட்டுக்காவலில் வைப்பது, போக்குவரத்தை முடக்கிக் கைது செய் வது, போராட்டத்திற்காக சென்னை வந்த மாற்றுத் திறனாளிகளை வெளியே வரவிடாமல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே குண்டுக்கட்டாக வாகனத்தில் ஏற்றி கைது செய்தது, அதேபோல் போராட்டத்திற்கு தலைமை ஏற்கச் சென்ற சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவர் எஸ். நம்பு ராஜன், மாநிலத் தலைவர் தோ.வில்சன், மாநில பொதுச் செயலாளர் பா. ஜான்சிராணி, மாநிலப் பொருளாளர் சக்கரவர்த்தி உள்ளிட்ட தலைவர்களை யும் மிக அராஜகமான முறையில் கைது செய்தது போன்ற அடுக்கடுக்கான அடக்கு முறைகளை ஏவியுள்ள தமிழ்நாடு காவல் துறையின் மேற்கண்ட நடவடிக்கை களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
நியாயமான கோரிக்கைகள்
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளி களுக்கு உதவித்தொகையாக குறைந்த பட்சம் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தில் முழுமை யாக வேலை வழங்குவதுடன், 25 நாட்கள் கூடுதல் வேலை தர வேண்டும். வேலை நேரத்தை 4 மணி நேரமாக தீர்மானிக்க வேண்டும். சட்டப்படி யான பணித்தல வசதிகள் வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனா ளிகள் உதவித்தொகை பெறுவதற்காக மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் அமைந்துள்ள வயது தளர்வு கமிட்டியை ரத்து செய்ய வேண்டும். மாற்றுத் திற னாளிகள் நலத்துறை மூலம் மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம் சார்பில் தொடர் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.
போராட்ட அறிவிப்பே குற்றமா?
ஆனால், போராட்ட அறிவிப்பே குற்றம் என்ற வகையில் செயல்பட்டு உள்ள தமிழ்நாடு காவல்துறை, சங்கத் தின் நிர்வாகிகளை வீட்டுக் காவலில் சிறை வைப்பது, பேருந்து நிலையத்தில் குண்டுக்கட்டாக கைது செய்வது, மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் களிடம் அராஜகமாக நடந்து கொள்வது, சிறைப்படுத்தப்பட்டோருக்கு உணவு - குடிநீர் வழங்குவதில் தாமதம் செய்வது என்று அவர்களது போராட்டத்தை முடக்க நினைக்கிறது. போராடுவதற் கான அடிப்படை உரிமை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கி யிருப்பதாகும். காவல்துறை, எந்த கார ணத்தைச் சொல்லியும் அந்த உரிமையை பறிப்பதை அனுமதிக்க முடியாது. தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, கைது செய்யப்பட்ட வர்கள் அனைவரையும் விடுதலை செய் வதுடன் மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக் கைகளை நிறைவேற்ற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.