மதுரை, மே 27- மதுரை கூடல்நகர் பகுதியில் ஜோ ப்ரியல் என்பவர் வசித்து வருகிறார். இவர் டாபர்மேன் வகையை சேர்ந்த நாய் ஒன்றை செல்லப்பிராணி யாக இல்ல த்தில்வளர்த்து வருகிறார். புதனன்று காலை வீட்டு வராண்டாவில் திடீரென 4 அடி நீளம் உள்ள விஷப் பாம்பு ஒன்று நுழைந் துள்ளது. பாம்பு வீட்டில் நுழைவதை பார்த்த அந்த நாய் தனது எஜமானரை காப்பாற்ற பாம்புடன் கடும் சண்டை யிட்டு, கடைசியில் பாம்பை கடித்து கொன்றுள்ளது. தொடர்ந்து நாய் குரைத்து கொண்டே இருப்பதை அறிந்த வீட்டின் உரிமை யாளர் ஜோப்ரியல் வெளியே வந்துபார்த்த போது விஷப்பாம்பு ஒன்று தனது செல்லப்பிராணியால் கடிக்கப்பட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சிய டைந்தார். மேலும் விஷப்பாம்பு கடித்ததில் நாயின் உடலில் இரண்டு மூன்று இடங்க ளில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரி விக்கப்பட்டு நாய்க்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.