tamilnadu

img

கவிஞர் தணிகைச் செல்வன் காலமானார்

சென்னை,அக். 29 -  தமிழகத்தின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவரும், மூத்த எழுத்தாளருமான தோழர் தணிகைச்செல்வன், வயது மூப்பு  மற்றும் உடல் நலக்குறைவால் செவ்வாய்க் கிழமை (அக்.29) மாலை 5 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 90.  செங்கல்பட்டு மாவட்டம், பாலாற்றங் கரையின் அருகில் உள்ள ஒரு சிறிய கிராமமான உரைக்காட்டுப்பேட்டையில் 1935-இல் பிறந்தவர் தணிகைச்செல்வன். அவரது இயற்பெயர் எத்திராஜன். மருத்துவத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  தமிழக முற்போக்கு மேடைகளில் 1970-களில் ஓங்கி ஒலித்த கவிதைக் குரலுக்குச் சொந்தக்காரர் கவிஞர் தணிகைச்செல்வன். தனது இறுதி மூச்சு வரைக்கும் எழுத்துப் பணியை தொடர்ந்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு மேடையில் அவர்  வாசித்த கவிதை, அடுத்த நாளே புத்தகமாக அச்சிடப்பட்டு பிரதிநிதிகளுக்கு வழங்கப் பட்டதும் கட்சி மேடைகளில் அவரது கவிதை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது கவிதைகளில் வல்லினம் மிகுந்திருக்கும். அதனாலேயே பெரும் எழுச்சி பெற்றது அவரது எழுத்துக்கள். மேலும், வர்க்க வரலாற்றைக் கவிதை வடி வத்திலும் எழுதியவர் தோழர் தணிகைச் செல்வன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர். ஏராளமான கவிதை நூல்கள் மற்றும்  கட்டுரைகள் எழுதியிருக்கிறார். தணிகைச் செல்வன் கவிதைகள் (1975)- சமூகசேவகி சேரிக்கு வந்தாள் (1978)- பூபாளம் (1989)-  இந்தியாவும் நானும் (1983)- சிவப்பதிகாரம் (1986)- உலக்கையிலும் பூப்பூக்கும் (1991)-  சகாராவின் தாகம் (1997) எனும் 7 தொகுதி களையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்தத் தொகுதியாக ‘தணிகைச்செல்வன் கவிதைகள்’ எனும் கவிதைத் தொகுதி 2001-ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. கலை -இலக்கியப் பணிகளில் தமிழ்நாடு முழுவதும் பயணித்தவர். பொதுவுடமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட வர். கட்சித் தலைவர்கள் பலருடன் தோழமையுடன் நெருங்கிப் பழகியவர். “15, ஸ்ரீராம் காலனி, தாம்பரம் சானிடோரியத்தில் (ரயில் நிலையம் அருகில்) உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்த தோழர் தணிகைச்செல்ன், திடீர் மாரடைப்பு காரணமாக அக். 29 அன்று காலமானார். மறைந்த தோழர் தணிகைச் செல்வனின் மூத்த மகன் பாரதி. இளைய மகன் சிங்காரவேலு. இருவரும் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். தோழர் தணிகைச் செல்வன் இறுதி நிகழ்ச்சிகள் புதன்கிழமை (அக்.30) பிற்பகல் 2 மணிக்கு குரோம்பேட்டை எரிதகன மயானத்தில் நடைபெறும் என அவரது மூத்த மகன் சிங்காரவேலு தெரிவித்துள்ளார்.