tamilnadu

img

ஈஷா யோகா மைய ஆசிரியர்கள் 4 பேர் மீது போக்சோ வழக்கு

ஈஷா யோகா மைய ஆசிரியர்கள்  4 பேர் மீது போக்சோ வழக்கு

கோவை, ஏப்.22 - ஈஷா யோகா மையத்தின் அறக் கட்டளை சார்பில் நடத்தி வரும் பள்ளி யில் சிறுவனிடம் பாலியல் அத்துமீற லில் ஈடுபட்ட விவகாரத்தில் உரிய நட வடிக்கை எடுக்காத பள்ளியின் ஆசிரி யர்கள் 4 பேர் மீது பேரூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். கோவை மேற்கு தொடர்ச்சி மலை யடிவாரத்தில் ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த யோகா மையத்தின் அறக்கட்டளை சார்பில், யோகா மைய வளாகத்திலேயே பள்ளி  ஒன்று நடத்தப்படுகிறது. இப்பள்ளி யின் விடுதியில் தனது மகனுக்கு பாலி யல் அத்துமீறல் நடைபெற்றதாகவும், இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரி வித்தும் நடவடிக்கைகள் இல்லை எனவும், பாலியல் அத்துமீறலுக்கு உள்ளான மாணவரின் தாயார் கோவை  பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் கொடுத்திருந்தார்.  இது தொடர்பாக ஜனவரி மாதம் வழக்குப் பதிந்திருந்த நிலையில், முதல்  தகவல் அறிக்கையினை மாணவரின் பெற்றோருக்கு வழங்கவில்லை. இதனை யடுத்து காவல்துறைக்கு எதிராக மாண வரின் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப் பட்ட நிலையில், முதல் தகவல் அறிக்கை  நகலை பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு முதல்  தகவல் அறிக்கையானது வழங்கப் பட்டுள்ளது. 2017-2019 ஆம் ஆண்டு காலத் தில் அறக்கட்டளை நடத்தும் பள்ளியில்,  பல சந்தர்ப்பங்களில், சக மாணவரால்  தனது மகன் பாலியல் வன்கொடு மைக்கு ஆளாக்கப்பட்டு துன்புறுத்தப் பட்டதாகவும் இது தொடர்பாக அறக் கட்டளை நடத்தும் பள்ளியின் நிர்வாகி கள் நிஷாந்த் குமார், பள்ளியின் முதல்வர் பிரகாஷ் சோமயாஜி, பொது  ஒருங்கிணைப்பாளர் சுவாமி விபு ஆகி யோரிடம் புகார் அளித்திருந்தாலும், சம்பவம் குறித்து பெற்றோரிடம் சொல்ல கூடாது என அவர்கள் தெரி வித்து இருந்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பள்ளியின் நிர்வாகிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்காத பள்ளியின் ஆசிரியர்கள் 4  பேர் மீது பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ வழக்குப்  பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.