tamilnadu

img

நெகிழி பொருட்கள் பயிலரங்கம்

நெகிழி பொருட்கள் பயிலரங்கம்'

பெற்ற வணிக உரிமையாளர்கள் மற்றும் குறு, சிறு நடுத்தர நிறுவன பிரதிநிதிகளுக்கான தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் மற்றும் நெகிழி கழிவு மேலாண்மையை திறம்பட செயல்படுத்துதல் தொடர்பான பயிலரங்கத்தினை, சார் ஆட்சியர் சு. கோகுல் வியாழக்கிழமை பெரம்பலூரில் உள்ள தனியார் அரங்கில் தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்வில், திருச்சி அண்ணா பல்கலைக்கழக பெட்ரோ கெமிக்கல் தொழில்நுட்பத் துறை உதவி பேராசிரியர் முனைவர்.என். ஸ்டாலின், நெகிழி கழிவு மேலாண்மை குறித்தும், நெகிழியின் தீமைகள் மற்றும் அதனை எவ்வாறு நாம் கையாளுவது என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இந்த பயிலரங்கில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியா ளர் எஸ். விஜயபிரியா, உதவி பொறியாளர் செல்வி.மு. வாணிஸ்ரீ,  பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன இணை பேராசிரியர் முனைவர்.ஏ. அசோக் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து மாணவர்கள், பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில், திருச்சிராப்பள்ளி அரசு சட்டக் கல்லூரி அருகில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. தண்ணீர் பந்தலை இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் சம்சீர் அகமது துவக்கி வைத்தார். இதில் மாவட்டத் தலைவர் சூர்யா, மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.கே.மோகன், சட்டக் கல்லூரி நிர்வாகி அபிராமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.