தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரும், மார்க்சியத்தின் மீது உறுதியான பற்றுக் கொண்ட கம்யூனிஸ்ட் ஊழியருமான மறைந்த ஆசிரியர், தோழர் செ.நடேசன் படத்திறப்பு திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் நடைபெற்றது. தோழர் செ.நடேசன் உருவப் படத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் திறந்துவைத்தார். இந்நிகழ்வில், கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.