தூத்துக்குடி, ஏப்.2- சங்க காலக் கொற்கை துறைமுகத்தை அடையாளம் காண்பதற்கு 2 ஆம் கட்டமாக கடல் சார் முன்கள புலஆய்வு பணிகள் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து திருச்செந்தூர் வரை நடைபெற்று வருகிறது. சங்ககால பாண்டியர்களின் துறைமுக மாக கொற்கை போற்றப்படுகிறது. சங்க இலக்கியங்களான அகநானூறு, ஐங்குறு நூறு, கலித்தொகை, சிலப்பதிகாரமும் கொற் கையைப் பற்றி விவரிக்கின்றன. இது தவிர பல வெளிநாடுகளைச் சேர்ந்த நூல்களும் கொற் கையை பற்றி மிகச் சிறப்பாக கூறியிருக்கி றது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு தொல்லி யல் துறை சார்பில் 1968 ஆம் ஆண்டு கொற்கை யில் மேற்கொண்ட அகழாய்வில் இரண்டரை அடி ஆழத்தில் ஆறு வரிசைகளில் ஒன்பது அடுக்குகளைக் கொண்ட செங்கல் கட்டுமான அமைப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப் பட்ட மூன்று சுடுமண் உறைகள் செங்கல் கட்டு மானமும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதவிர, தமிழில் எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடு கள் கண்டெடுக்கப்பட்டன. கொற்கை அக ழாய்வில் சேகரிக்கப்பட்ட கரிமத்தினை பகுப் பாய்வு செய்ததில் கொற்கையின் காலம் கி.மு.8 என்றும் அதாவது 2,500 ஆண்டுகளுக்கு முன்பு என்றும் காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. பாண்டியர் காலத்தில் கொற்கை மிகச் சிறந்த துறைமுகமாக இருந்துள்ளது. வெளி நாடுகளுடன் குறிப்பாக ரோம் நாட்டுடனும், இலங்கையுடனும், பெரும்பாலான தென் கிழக்கு ஆசிய நாடுகளுடனும் கடல்வழி வணி கம் நடைபெற்றுள்ளது. அகழாய்வாளர்கள் கொற்கையில் ரோமநாட்டு மட்கலன்களும், ரௌலட்டட் வகை பானை ஓடுகளையும் கண்டெடுத்துள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு கொற்கையில் மேற்கொண்ட அகழாய்வில் கங்கைச் சம வெளியைச் சார்ந்த கி.மு 5-ஆம் நூற் றாண்டுக்கு முந்தைய வடஇந்திய கருப்பு வண்ண மெருகேற்றப்பட்ட பானைஓடுகளும் மற்றும் கருப்பு பூச்சுப் பெற்றுள்ள பானை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை தமிழ் நாடானது இந்தியாவின் பிறபகுதிகளோடு குறிப்பாக கங்கை சமவெளி நகரங்களுடன் நெருங்கிய உள்நாட்டு வணிகம் நடைபெற் றுள்ளதைக் எடுத்துக்காட்டுகிறது. ஏற்கனவே மேற்கண்ட அகழாய்வுகளில் பெறப்பட்ட கரி மப்பகுப்பாய்வுக் காலக்கணிப்பின்படி கி.மு 8-ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே கொற்கை மிகமுக்கியத் துறைமுகமாக செயல்பட்டி ருந்ததை சுட்டிக்காட்டுகிறது. இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் கொற்கை துறைமுகத்தை கண்டுபிடிப்ப தற்காக கடல் சார் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன்னர் கடல் சார் முன்கள புல ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதயைடுத்து கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 3ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து திருச்செந்தூர் வரை 7 நாட்கள் கொற்கை துறைமுகத்தை அடையாளம் காணும் வகையில் முன்கள புல ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியினை இந்திய கடல்சார் பல்க லைக்கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில் நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து தமிழக தொல்லியல் துறையினர் நடத்தினர். இந்த பணிகளை தொழில்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் 2ம் கட்டப்பணிகள் டிசம்பர் மாதத்திற்கு பிறகு தொடங்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது கடந்த ஒரு வார காலமாக தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து திருச்செந்தூர் வரையில் கடல்சார் முன்கள புலஆய்வு பணிகள் நடந்து வரு கிறது. மல்டிபீம் எக்கோ சவுண்டிங் சைட் ஸ்கேன் சோனர் சப் பாட்டம் பிரபைலர் என்ற அதி நவீன கருவி மூலம் கப்பலில் சென்று இந்த ஆய்வுப்பணிகள் நடந்து வருகிறது. இதில் தமிழக தொல்லியல் துறை, இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
விக்னேஷ்