tamilnadu

img

“இந்தியாவை மதச்சார்புள்ள நாடாக மாற்றத் துடிக்கும் பரிவாரங்களுக்கு மக்கள் துணைபோக மாட்டார்கள்”

மதுரை, மே 14- இந்திய அரசியல் சாசனத்தை  மாற்றி, இந்தியாவை ஒரு மதச்சார்  புள்ள நாடாக மாற் றத் துடிக்கும் பரி வாரங்களுக்கு மக் கள் ஒருபோதும் துணைபுரிய மாட்டார்கள் பேராயர்  அந்தோணி பாப்புசாமி கூறியுள் ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மணிப்பூர் மாநில வன்முறைகள் குறித்து வருத்தமளிப்பதாக உள்ளது.  மணிப்பூரில் வன்முறையாளர்களால் 25-க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. பல உயிர்கள் பலியாகியுள்ளன, ஆயிரக்கணக் கான மக்களின் வீடுகளும் வாழ்வாதாரங்க ளும் சூறையாடப் பட்டு அவர்கள் உயிருக்கு பயந்து மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். இந்த அவலநிலை மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது.  வன்முறை எதற்கும் என்றைக்கும் தீர்வாகாது  என்று சொன்ன மகாத்மா வாழ்ந்த இந்த தேசத் தில் இது போன்ற நிகழ்வுகள் வருத்தத்திற்கு  உரியது மட்டுமல்ல இந்திய இறையாண்மை யைக் கேள் விக்குட்படுத்துவதாக இருக்கிறது. குறிவைத்து சூறையாடப்பட்ட தேவால யங்கள், ஒரே இனத்தவராக இருந்தாலும் கிறிஸ்தவரென்பதால் தாக்கப்பட்ட நிலை இவையெல்லாம்  மதவெறியூட்டப்பட்ட அரசியல் திரு விளையாடலே என்பதை மறுக்க  இயலாது. ஆகப் பெரிய சமூக ஊடகங்க ளும் கூட இது குறித்த செய்திகளை வெளியிடாமல் அமைதிகாப்பது இதை  உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.  அர சியல் சாசனத்தை மாற்றி, இந்தியாவை  ஒரு மதச்சார்புள்ள நாடாக மாற்றத் துடிக்கும் பரிவாரங்களுக்கு மக்கள் ஒருபோதும் துணை புரிய மாட்டார்கள், அரசும் துணைபோகக் கூடாது. எல்லா மக்களின் வாழ்வையும் வாழ்வாதா ரத்தையும் காப்பதற்கே எமது அரசு அமைக் கப்பட்டுள்ளது எனக்கூறும் மணிப்பூர் முதல் வர் தன் வார்த்தைகளை செயல்படுத்திக் காட்டட்டும்.  ஒன்றிய அரசு குடிமைச் சமூகங்களைக்  காக்க போர்க்கால முறையில் நடவடிக்கை  எடுக்க வேண்டும், வன்முறைகளை அடக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாது காப்பும் உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.