மதுரை
தமிழகத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1500-யை தாண்டியுள்ளது. 17 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் முதல் கொரோனா பலியை சந்தித்த மதுரை தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு வரும் நிலையில், சிம்மக்கல் அருகிலுள்ள பழைய சொக்கநாதர் கோவிலில் திங்களன்று பிரதோஷத்தை முன்னிட்டு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. கோவில் பூசாரி கொரோனா தடுப்பு விதிமுறையை பின்பற்றுவதாக கூறி கதவை அடைத்துக்கொண்டு பூஜை செய்துள்ளார். ஆனால் உள்ளூர் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கதவுக்கு அருகே கூடிநின்றுள்ளனர். இந்த செயல் கொரோனவை பரப்புவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி தரும் என்பதை அறியாமல் இருப்பது தான் சோகமான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.