நாகர்கோவில், ஜன.13- கன்யாஸ்பின் “ கூட்டுறவு நூற்பாலை தொழிற்சங்க அங்கீகார தேர்தல் 11-1-2022 ஆம் தேதிசெவ்வாயன்று நடைபெற்றது. ஆலையில் சுமார் 350 தொழிலாளர்களுக்கு மேல் வேலை பார்த்து வருகின்றனர். அங்கீகார தேர்தலில் பணிநிரந்தரம் பெற்ற 98 தொழிலாளர்கள் மட்டுமே வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள் ஆவர். இந்த தேர்தலில் சிஐடியு, தொமுச, ஏடிபி, பிஎம்எஸ் ஆகிய சங்கங்கள் போட்டியிட்டன.தேர்தலில் சங்கங்கள் பெற்ற வாக்குகள் தொமுச- 27 ஏபிடி -25 சிஐடியு-29 பிஎம்எஸ்-17 ஆகும். 20 வாக்குகள் பெற்றால் அங்கீகாரம் என்ற அடிப்படையில் சிஐடியு, தொமுச, ஏடிபி ஆகிய சங்கங்கள் அங்கீகாரம் பெற்றன. அங்கீகாரத்தேர்தலில் சிஐடியு சங்கத்தின் சார்பில் தமிழ் மாநில பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளர் எம். அசோகன், மாநில செயலாளர் வி.மாணிக்கவாசகம், சிஐடியு மாவட்டத் தலைவர் பி. சிங்காரன், மாவட்டச் செயலாளர் கே. தங்க மோகனன், கன்யாஸ்பின் சங்கத்தின் செயல் தலைவர் ஜி.சந்திரபோஸ் , தலைவர் எஸ்.சக்திவேல், செய லாளர் இ. வடிவேல்குமார் உட்பட நிர்வாகிகள் முன் நின்று செயல்பட்டனர். சிஐடியு சங்கம் முதல் பெரும் சங்கமாக அங்கீகாரம் பெறுவதற்காக பாடுபட்ட அனைத்து தொழிற்சங்கத் தலைவர்கள், நம்பிக்கையுடன் வாக்களித்த தொழிலாளர்களுக்கு தமிழ் மாநில பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேள னத்தின் சார்பில் பொதுச்செயலாளர் எம்.அசோகன் வாழ்த்துக்களை தெரி வித்துக்கொண்டுள்ளார்.