சென்னை, ஜூன் 17- மதச்சார்பின்மையை பாதுகாக்க வருகிற மக்களவை தேர்தலில் சாதி, மதம் கடந்து அனைவரும் ஒன்றி ணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என மக்கள் ஒற்றுமை மேடை மாநாட்டில் தலைவர்கள் அறைகூவல் விடுத்தனர். “மதச்சார்பின்மை காப்போம், அரசியல் சாசனம் காப்போம்” என்ற தலைப்பில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சிறப்பு மாநாடு சென்னை ராயபுரத்தில் வெள்ளியன்று (ஜூன் 16) நடைபெற்றது. தமிழ்நாடு சிறுபான்மை நல வாரியத்தின் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், “ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால்தான் அந்த மாநிலம் முன்னேறும் என்று பிரதமர் அடிக்கடி கூறுவார். ஆனால், மணிப்பூ ரில் பாஜக அரசுதான் உள்ளது. இன்றைக்கு அந்த மாநிலம் பற்றி எரிகிறது. ஒன்றிய அமைச்சர் வீட்டை தீயிட்டு கொளுத்துகிறார்கள். இதற்கு காரணம் என்ன?” என்றார். மக்களவைத் தேர்தல் அரசியல் வாக்கு வங்கிக்காக , மணிப்பூர் மாநிலத் தின் சமவெளியில் வாழ்கின்ற மக்களுக்கும், மலைகளில் வசிக்கக் கூடிய பழங்குடியின மக்களுக்கும் இடையே மோதலை திட்டமிட்டு உரு வாக்குகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்துக்களுக்கும், இஸ்லாமி யர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் இடையே மோதலை உருவாக்கி னார்கள். ஒவ்வொரு முறையும் சமுதா யத்தை பிளப்பதற்கு புது புது யுக்திகளை கையாள்கிறார்கள் என்றும் அவர் கடுமையாக சாடினார். மணிப்பூரில் கலவரம் வெடித்த தற்கு காரணம் உயர்நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்புதான். அப்படி ஒரு தீர்ப்பை வழங்குவதற்கான அதிகாரம் நீதிமன்றத்திற்கு கிடையாது. அங்குள்ள ஒரு பகுதி மக்கள், மலைவாழ் மக்கள் ‘செட்யூல் டிரைப்ஸ்’ என்கிற அந்தஸ்தோடு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு வழக்கு தொடுக்கிறார்கள். ஆனால் நீதிபதிகள் சிந்தாந்த வாதிகளாக இருக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டினார். உத்தரப்பிரதேசத்தில் 13 வயது சிறுமியை ஒருவர் ஏமாற்றி கர்ப்பமாக்கி விடுகிறார். 13 வயது பெண் எப்படி ஒரு குழந்தையை ஈன்றெ டுத்து வளர்க்க முடியும். எனவே கருவை கலைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு போட்டால், நீதிபதி அந்த வழக்கறிஞரை அழைத்து நீ மநுஸ்மிருதி படித்திருக் கிறாயா எனக் கேட்கிறார். இது போன்ற நீதிபதிகள் எழுதும் தீர்ப்பால் நாட்டில் மிகப்பெரிய குழப்பம் ஏற்படுகிறது என்றும் பீட்டர் அல்போன்ஸ் சாடினார்.
தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராஜேந்திரன் தமது தலைமை உரையில், “ஒரு தனி மனிதர் ஒரு மதத்தை சார்ந்திருக்கக் கூடாது என அரசியலமைப்புச் சட்டம் கூறவில்லை. ஆனால் அரசு ஒரு மதத்தின் சார்பாக இருக்கக் கூடாது. ஒரு மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவருடைய மரியாதை குறையக் கூடாது. தனிமனித வழி பாட்டு நம்பிக்கையில் தலையிடக் கூடாது என்றுதான் கூறப்பட்டுள்ளது” என்றார். மதச்சார்பின்மை என்பது சமூகத்து டன் தொடர்புடையது. அனைவ ரையும், அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்துச் செல்வதே மதச் சார்பின்மை என்றும் அவர் கூறினார். இதில் எஸ்.ஏ.பெருமாள் (சிபிஎம்), வன்னி அரசு (விசிக), புதுமடம் ஹலீம் (மனிதநேய மக்கள் கட்சி) ஆகியோரும் பேசினர். ஒருங்கிணைப் பாளர் க.உதயகுமார் அறிமுக உரையாற்றினார். எல்.பி.சரவண தமிழன் வரவேற்றார். மேரி லில்லி பாய் நன்றி கூறினார். பலராமன் (காங்கிரஸ்), எல்.சுந்தரராஜன் (சிபிஎம்), சென்னை மக்கள் மேடை ஒருங்கிணைப்பாளர் எஸ்.குமார், முகமது யூசுப் (வழக்கறி ஞர்), இனாமுல் அசன் (இந்திய ஒற்றுமை இயக்கம்), எஸ்.என்.சிக்கந்தர் (ஜமாத் இஸ்லாமி `ஹிந்த்), கே.பாலகிருஷ்ணன் (சுய ஆட்சி இயக்கம்) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.