tamilnadu

img

தக்கலையில் மக்கள் சந்திப்பு இயக்கம்

நாகர்கோவில், செப்.29- சிபிஎம் தக்கலை நகர கிளைகள் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டக் குழு உறுப்பினர் சந்திரகலா தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ரெஜிஷ் குமார், வட்டாரச் செயலாளர் சுஜா ஜாஸ்பின், வட்டாரக் குழு உறுப்பினர் ஜாண் இம்மானுவேல்,சிவமோகன் ஷீலா சரோஜினி, விஷ்ணு பீட்டர், அமலதாஸ், ஓய்வு பெற்ற ஆசிரியர் முரளீதரன் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் காளி பிரசாத், மாதர் சங்க வட்டாரச் செயலாளர் ராஜகனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.