tamilnadu

அக்.10 ல் பி.எப். ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம்

நாகர்கோவில், செப்.29- நாகர்கோவிலில் அக் டோபர் பத்தாம் தேதி வருங் கால வைப்பு நிதி ஓய்வூதிய தாரர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து வருங்கால வைப்பு நிதி ஆணையர் பஞ்கஜ்வர்மா வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள் தொழி லாளர்கள் தொழில் நிறுவ னங்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகை யில் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற பத்தாம் தேதி காலை 10 மணிக்கு நடக்கி றது. கூட்டத்தில் மண்டல ஆணையர் கலந்து கொண்டு ஓய்வூதியதாரர்கள், தொழி லாளர்கள் ,தொழில் நிறுவ னங்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்கி றார்கள். அனைத்து ஓய்வூதிய தாரர்களுக்கும் ஓய்வூதியம் வழங்குவதில் ஏதேனும் குறைகள் இருந்தால் மண்டல அலுவலகத்தை அணுகலாம். மேலும் வருங் கால வைப்புநிதி சந்தாதார ராக சேர தகுதி இருந்தும் சேர்க்கப்படாமல் இருப்பவர் கள், செயலிழந்த உறுப்பினர் கணக்கை முடிக்க விரும்பு வர்கள், மாத சந்தா செலுத்து வது தொடர்பான குறைகள் உள்ளவர்கள் விண்ணப்பம் அனுப்பி உரிய காலத்தில் வைப்புநிதி கிடைக்கப் பெறாதவர்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்து வருகிற மூன்று மாதத்திற்குள் 58 வயது முடிவடைகிற வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பென்ஷன் விண் ணப்பத்தை சமர்ப்பித்தலில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள லாம். மேலும் தொழில் நிறுவ னங்கள் பணம் செலுத்துவது  (UAN)உலகளாவிய கணக்கு எண் ஒதுக்கீடு செய் வது, புதிய உறுப்பினர்களை வருங்கால வைப்பு நிதி யில் சேர்த்துக் கொள்வது தொடர்பான நவீன தொழில் நுட்பங்கள் குறித்து தங்களது சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ள லாம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவர்கள் தங்கள் மின்னஞ்சல் முக வரியில் இருந்து ro.nager coil@epfindia.gov.in. என்ற முகவரிக்கு மின்னஞ் சல் செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.