tamilnadu

img

ஓ.பி.எஸ். மகனுக்கு பாஜக கூட்டணி அழைப்பு: இபிஎஸ் தரப்பு கடுப்பு

சென்னை, ஜன.30- தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடைபெறவுள்ளது. இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்கும்படி, ‘‘அதிமுக மக்களவைக் குழு தலைவர்’’ என்று குறிப்பிட்டு ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அதிமுக எம்.பி.யாக ரவீந்திரநாத்தை கருதக்கூடாது என எடப்பாடி பழனிசாமி மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார். பழனிசாமி கடிதம் எழுதி 6 மாதங்கள் ஆகியும் ‘அதிமுக மக்களவை குழு தலைவர்’ என குறிப்பிட்டு ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடிதம் மூலம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. நாடாளுமன்ற கூட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டத்திலும் ரவீந்திரநாத் பங்கேற்றுள்ளார். ‘‘அதிமுக மக்களவை குழு தலைவர்’’ என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் பங்கேற்றிருக்கிறார். மேலும் ‘‘அதிமுக மாநிலங்களவை குழு தலைவர்’’ என்ற அடிப்படையில் பழனிசாமி ஆதரவு எம்.பி. தம்பிதுரையும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

;