சென்னை, செப்.25- கிராமப்புறங்களில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ‘ஊராட்சி மணி’ திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி யுள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்.26 அன்று திறந்து வைக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் அளிக்கப்படும் புகார் களைத் தீர்க்கும் வகையில் உதவி மையம் அமைப்பது தொடர்பாக அரசாணை பிறப்பிக் கப்பட்டது. அதன்படி, ஊராட்சி இயக்ககத்தில் ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த அழைப்பு மையத்தை செவ்வாய்க்கிழமை (செப்.26) முதலமைச்சர் திறந்து வைக் கிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் புகார்களை தெரிவிக்கும் வகையில் மையங்களின் அழைப்பு எண்’ 155340’ வழங்கப் பட்டுள்ளது. மாவட்டங்களில் ஊராட்சி மணி அழைப்பு மையத் தின் தொடர்பு அலுவலராக, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். மக்களுக்கு பாரபட்சமற்ற, சமமான சேவையை வழங்கும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஊரக வளர்ச்சி இயக்குநரகத்தில் கட்டணமில்லா சேவை தொடங்கப்படுகிறது. அழைப்பு மைய நிர்வாகி மூலமா கவோ, இணையதளம் வாயிலா கவோ குறைகளை உடனடியாக தீர்க்கும் வகையில், உரிய செயல்பாடுகள் முன்னெடுக்கப் படும். இது தவிர, சமூக வலைதளங் கள் மூலம் குறைகள் பெறப்பட உள்ளன. புகார்களின் தீவிரத் தன்மை அடிப்படையில் அவை வகைப்படுத்தப்பட்டு, உரிய தீர்வு காணப்படும். அதேபோல, சமூக ஊடகங்கள் மூலம் பெறப்படும் புகார்களும் குறைதீர் மையத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு, அவற்றுக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும். புகார்களை நேரடி அழைப்பு மையம், வலைதளம், செயலி வாயிலாகவும் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளதாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.