ராமேஸ்வரம், செப்.11- தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில் வங்கக் கடலில் அமைந்துள்ளது பாம்பன் ரயில் பாலம். இராமேஸ்வரம் தீவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்புடன் இணைக்கும் வகையில் கடந்த 1914 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கடல் வழி வணி கத்தில் நம் நாடு தழைத்தோங்கிய காலத்தில் இந்த ரயில் பாலம் முக்கிய பங்கு வகித்துள்ளது. அதற்கேற்ப கப்பல்கள் செல்லும் வகையில் பாலத்தின் நடுப்பகுதியில் தண்ட வாளத்தை இரண்டாக பிரிப்பது போன்று தூக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 2.05 கி.மீ. நீளமுள்ள இது இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெயரையும் பெற்றது. 110 ஆண்டுகளை கடந்த நிலையில் அடிக்கடி ஏற்படும் மண் அரிப்பு காரணமாக பாலம் அதன் ஸ்திரத்தன்மையை இழந்து பலத்த சேதம் அடைந்தது. 2019 ஆகஸ்ட் 11 ஆம் தேதி பாம்பனில் புதிய ரயில்வே பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. அப்போது 2021, செப்டம்பர் மாதத் திற்குள் புதிய பாம்பன் ரயில் பாலத்துக்கு பணிகள் முடிக்கப்படும் என அறிவிக்கப் பட்டது. ஆனால், பாம்பன் கடல் பகுதியில் அவ்வப்போது ஏற்பட்ட கடல் சீற்றம், புயல் உள்ளிட்ட வானிலை மாற்றங்கள் மற்றும் கொரோனா பெருந்தொற்று காரணமாக நிர்ண யிக்கப்பட்ட நாளில் முடிக்க முடியவில்லை. இந்நிலையில் பாம்பன் புதிய ரயில் பாலத்தின் நடுப்பகுதியில் தூக்கு பாலம் இணைக்கும் பணியும் முடி வடைந்துள்ளது. வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் இராமேஸ்வரம்-மண்டபம் இடையேயான ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.