கன்னிமாரா நூலக நுழைவாயிலில் மார்க்ஸ் சிலை தமிழக முதல்வருக்கு பெ. சண்முகம் நன்றி!
சென்னை, மே 6 - சென்னை கன்னிமாரா நூலக நுழைவு வாயிலில், மாமேதை காரல் மார்க்சின் சிலையை நிறுவும் பணிகள் துவங்கி யுள்ளதாக அறிவித்துள்ள முத லமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பெ. சண்முகம் மேலும் கூறியிருப்பதாவது: “சென்னையில் மார்க்சுக்கு சிலை வைக்க வேண்டுமென்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்தது. அதனையேற்று, ஏப்ரல் 3 அன்று அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க வரும் முன்பு, சிலை வைப்ப தற்கான அறிவிப்பை முதலமைச்சர் சட்டமன்றத்தில் வெளியிட்டார். இதனிடையே, முதல்வர் அவர்களை ஏப்ரல் 30 அன்று திரு மண நிகழ்ச்சியில் சந்தித்தபோது, ‘மார்க்ஸ் சிலை வைப்பதற்கான இடம் தேர்வு’ குறித்து கேட்டறிந்தேன். அப்போது, ‘நந்தனம் கல்லூரியில் அண்ணாசாலையை பார்த்தவாறு அமைக்க முடிவு செய்துள்ளோம். உங் கள் அலுவலகத்திற்கு அருகில் தான்.. நீங்களெல்லாம் நடந்தே வந்துவிட லாம்’ என்றார் முதல்வர். அப்போது நான், ‘தோழர் காரல் மார்க்ஸ் தமது வாழ்நாளில் பெரும்பகு தியை நூலகத்தில் கழித்தவர்; எனவே, சர்வதேச அளவில் புகழ்பெற்ற கன்னி மாரா நூலகத்தில் அவர் சிலையை வைப்பது பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்தேன். அதற்கு முதல்வர், ‘அங்கு அனுமதி கிடைப்பது சிரமம். அந்த நூலகத்திற்கென்று தனி கமிட்டி உள்ளது. அவர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றதுடன், அண்ணா சாலை, கடற்கரை சாலையில் வைக்க நீதிமன்றத் தடை இருக்கிறது’ என்பதையும் எடுத்துரைத்தார். இந்நிலையில், மாமேதை காரல் மார்க்ஸ் பிறந்த தினமான மே 5 அன்று ‘கன்னிமாரா நூலக நுழை வாயிலில் மார்க்ஸ் சிலை அமைப்ப தற்கான பணிகள் துவங்கியுள்ளன’ என்று முதல்வர் அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மகிழ்ச்சியுடன் வரவேற் கிறோம். மார்க்சிய தத்துவத்தை இளம்தலை முறையும், தொழிலாளி வர்க்கமும் மேலும் கற்பதன் மூலம், அது மேலும் செம்மைபெறும், சுரண்டலற்ற சமூகம் அமைக்க பாடுபடுவோம்”. இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.