பள்ளிப்பட்டு, ஜன.22 திண்டிவனம் - நகரி ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில், விளை நிலங் களை இழக்கும் விவசாயி களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலை வர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். திண்டிவனம் முதல் நகரி வரை ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய வட்டங்களில் நிலத்தை இழக்கும் விவசாயிகளின் கோரிக்கை மாநாடு ஜன 21 அன்று பள்ளிப்பட்டு அருகில் உள்ள அத்திமாஞ்சேரி ப்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சி.பெருமாள் தலைமை தாங்கினார்.இதில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.துளசி நாராயணன் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசி னார். மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், மாவட்ட துணைத் தலைவர் ஜெயச்சந்திரன் உட்பட்ட பலர் பேசினர்.ஜோதி பிரகாஷ் நன்றி கூறினார்.
பெ.சண்முகம்
இந்த மாநாட்டில் விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் பேசுகையில், ஆந்திர மாநிலம் நகரி முதல் திண்டிவனம் வரை யில் ரயில் பாதை அமைக் கும் பணிகளுக்காக விளை நிலங்களைக் கையகப்படுத் தும் பணியில் அரசு அதிகாரி கள் ஈடுபட்டு வருகின்றனர். முப்போகம் விளையக் கூடிய விவசாய நிலங்களை இழக்கும் விவசாயிகளுக்கு அதற்கு ஏற்ப உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். திண்டிவனம்-நகரி ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில், நிலம் இழக்கும் விவசாயிகள் கடந்த சில மாதங்களாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அரசு கண்டுகொள்வதில்லை. இத்திட்டத்திற்காக விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திரு வள்ளூர் ஆகிய மாவட்டங்க ளில் விளை நிலங்களை இழக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி வரும் மார்ச் 6ஆம் தேதி ஆயிரக்கணக் கான விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவ லகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடை பெறும் என்றார்.