tamilnadu

img

ஓய்வூதியர் நலனுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் - ஓய்வூதியர்கள் அமைப்பாக திரள வேண்டியது அவசியம்

மின்வாரிய ஓய்வுபெற்றோர் மாநில மாநாட்டில் பி.சம்பத் பேச்சு

திருவண்ணாமலை, செப்.25- ஓய்வூதியர்களின் நலனுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால்  ஓய்வூ தியர்கள் அமைப்பாக திரள வேண்டியது அவசியம் என்று சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர்  பி.சம்பத் கூறினார். தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின்  9  ஆவது மாநில மாநாடு, திரு வண்ணாமலையில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.  செப்டம்பர் 25 புதன்கிழமை யன்று  காலையில் சங்கக் கொடியை  ஏற்றி வைத்த மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் மாநாட் டிற்கு தலைமை வகித்தார்.  விழுப்பு ரம் மண்டல செயலாளர் தங்க. அன்பழகன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்புக்குழு தலைவர் வெ. மன்னார் வரவேற் றார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக் குழு உறுப்பினர் பி. சம்பத் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார். பி.சம்பத் பேசுகையில்,  ஒன்றிய  ஆட்சியாளர்களால் பல்வேறு முனைகளில் இருந்தும் தொழிலா ளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படு கிறது. ஓய்வூதியம், நிரந்தரப் பணி, போனஸ், விடுப்புச் சலுகை, மருத்துவச் சலுகை உள்ளிட்ட சலுகைகள்   மறுக்கப்பட்டு வரு கின்றன. இத்தகைய அராஜகத் திற்கு எதிராக உலகம் முழுவதும் எழுச்சிமிகு போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. நிரந்தர ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல ஓய்வூதியர் நலனுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் ஓய்வூதியர்கள் அமைப்பாக திரள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

தொழிலாளி வர்க்கம் மீது உக்கிர தாக்குதல் 

உலகமயம், தாராளமயம், தனி யார்மயம் என்ற பெயரில் முத லாளித்துவம் பல்வேறு சதி வேலை கள் மூலம் தொழிலாளி வர்க்கம் மீது உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றது.  இந்த  கொள் கைகளை அகற்றாமல் நமக்கு உரி மைகள் கிடைக்காது.  இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, உழைப்பாளி மக்கள் மீது நடத்தப்படும்  உக்கிரமான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளை பாதுகாக்க, சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களை ஏவி  விட்டு தந்திரம் செய்து வருகிறது.  வகுப்புவாதம், சாதிய ஒடுக்கு முறை என்ற பெயரில் பாசிசம்  மீண்டும் தலைதூக்குகிறது. உரிமைகளுக்காக போராடு கின்ற சாம்சங் தொழிலாளர் களுக்கு ஆதரவு நிலையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.  தமிழ்நாடு  மின்சார வாரியம், பொதுத்துறை நிறுவனமாக தொடர தமிழக அரசு  முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறினார்.  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) பொதுச்  செயலாளர் எஸ். ராஜேந்திரன், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கே. கர்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  பேரணி மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலா ளர் எஸ். ஜெகதீசன்,  பொருளாளர்  ஆ.பழனி ஆகியோர் அறிக்கை களை சமர்ப்பித்தனர்.  ஒலிக்கதிர் நிதி பொறுப்பாளர் முகவை கி.பெரு மாள் உரையாற்றினார். வாசன் கண் மருத்துவமனை மருத்துவர் கிருத்திகா கண் சிகிச்சை குறித்து உரையாற்றினார். வைகறை கலைக்குழுவின் நாட்டுப் புற பாடல்களும்,  எழுத்தாளர்  பவா. செல்லத்துரை கருத்துரை யாற்றினார்.   முன்னதாக திருவள்ளு வர் சிலை அருகில் இருந்து துவங்கிய  ஊர்வலத்தில் ஏராளமான பிரதிநிதி கள் கலந்து கொண்டனர்.