tamilnadu

img

அனைத்துக் குடும்பங்களுக்கும் சொந்த வீடு: நிரந்தரத் தீர்வுக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

அனைத்துக் குடும்பங்களுக்கும் சொந்த வீடு: நிரந்தரத் தீர்வுக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சொந்த வீட்டை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் வலியுறுத்தி யுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, கட்சி யின் மதுரவாயல் பகுதிக்குழு சார்பில் குடிமனைப் பட்டா கோரி ஆலப்பாக் கத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், மாநாட்டு நினைவு கல்வெட்டை திறந்து வைத்தார். மேலும், பகுதிக்குழு சார்பில் வழங்கப்பட்ட ரூ.3.50 லட்சம் மாநாட்டு நிதியையும் பெற்றுக் கொண்டார். “

பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” தமிழ்நாட்டில் 1949-ஆம் ஆண்டு முதலே இலவச வீட்டுமனைத் திட்டம் அமலில் உள்ளது என்றும், இருப்பினும் பல லட்சம் குடும்பங்கள் இன்னும் பட்டா கிடைக்காமல் உள்ளதாகவும் சண்முகம் குறிப்பிட்டார். “2025-26 நிதியாண்டில் 5 லட்சம் பட்டாக்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும், பெல்ட் ஏரியா வரைமுறையை நீக்கி 86 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்படும் என அர சாணை வெளியிட்டுள்ளதையும் வரவேற்கிறோம்,” என்றார் சண்முகம். ஆனால், 2006ஆம் ஆண்டு கலைஞர் வெளியிட்ட அரசாணையில் “ஆட்சேபனையற்ற புறம்போக்கு” என்று வகைப்படுத்தப்பட்ட நிலங்கள், தற்போதைய அரசாணையில் “ஆட்சே பணை புறம்போக்காக” மாற்றப் பட்டுள்ளதை சரி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“நீர்நிலைகளை  பாதுகாக்க வேண்டும்” “சென்னை மாநகரில் 120 ஏரிகள் அழிக்கப்பட்டு குடியிருப்புகளாக மாறியுள்ளன. குளம் மறைந்து குடி யிருப்பாக மாறி 50 ஆண்டுகள் கடந்த பிறகும், வருவாய்த்துறை ஆவ ணங்களில் ‘குளம் புறம்போக்கு’ என்று  இருப்பதற்காக பட்டா மறுப்பது சரியல்ல. பயன்பாட்டை இழந்த நிலத்தை வகைமாற்றம் செய்து பட்டா தர வேண்டும்,” என்றார் சண்முகம். தற்போதுள்ள நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அதே வேளை யில், மக்கள் தேவைக்காக நீதிமன்றம், பேருந்து நிலையம் அமைக்க ஏரியைப் பயன்படுத்த திட்டமிடும் அரசு, ஏழைகளுக்காகவும் திட்டமிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். “வீடு கட்டும் திட்டத்தில் மாற்றம் தேவை” கலைஞர் வீடு கட்டும் திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் பயனடைய மனைப்பட்டா இருக்க வேண்டும் என்றும், பட்டா இல்லாத ஏழை மக்கள் இந்த திட்டங்களால் பயனடைய முடியவில்லை என்றும் சண்முகம் குறிப்பிட்டார். “கேரளத்தில் பினராயி விஜயன் அரசு, சொந்த வீடு இல்லாத 96 சதவிகித குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடு கட்டித்தருகிறது. தமிழகத்தில் வீடுகட்டும் திட்டம் 3.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. இந்த தொகையில் தரமான வீடு கட்ட முடியுமா?” என்று கேள்வி எழுப்பி னார்.

“குடிமனை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு தேவை” தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமாக 70 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் உள்ளதாகவும், அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 செண்ட் குடியிருப்பு தர முடியும் என்றும் சண்முகம் தெரிவித்தார். “2 ஆயிரம் ஏக்கரில் புதிய நகரை அரசால் உருவாக்க முடியும் போது, இதை செய்ய முடியாதா? அனைத்து குடும்பங்களுக்கும் சொந்த குடி மனையை வழங்கியது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தான் என்று ஆண்டா ண்டு காலமும் பேசக்கூடிய வகையில் அரசாணை வெளியிட வேண்டும்,” என்று சண்முகம் வலியுறுத்தினார். கூட்டத்திற்கு பகுதிச் செயலாளர் டி. அரவிந்தன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முரு கன், செயற்குழு உறுப்பினர்கள் க. பீம்ராவ், சு. வெள்ளைச்சாமி, எஸ். குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி. தாமஸ், எஸ். சரவணச்செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.