tamilnadu

இந்திய மொழிகளின் வளர்ச்சிக்காக வல்லுநர் குழு அமைப்பு

புதுதில்லி,டிச.15-  இந்திய மொழிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க தொலைநோக்குத் திட்டங் கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் வல்லுநர்கள் குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளதாகவும் ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் பதிலளித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்டுள்ளபடி இந்திய மொழிக ளின் வளர்ச்சியை உறுதிசெய்ய  உயர்மட்டக் குழு அமைக்கப்பட் டுள்ளதா என்று பெரம்பலூர் நாடாளு மன்ற உறுப்பினர் பாரிவேந்தர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அந்த பதிலில், இந்திய மொழிக ளின் வளர்ச்சிக்கு வழிவகுக்க சாமு கிருஷ்ண சாஸ்திரி தலைமையில் வல்லுநர்கள் குழு ஒன்று அமைக் கப்பட்டுள்ளது. இந்திய மொழி களை கற்பிப்பது, வளர்ச்சியை ஊக்கு விப்பது மற்றும் பயன்பாட்டை விரிவு படுத்துவது போன்ற நடவடிக்கைக ளுக்காக இந்தக் குழு ஒன்றிய கல்வித் துறை அமைச்சகத்துக்கு ஆலோசனை கள் அளிக்கும் என்று தெரிவித்தார்.