tamilnadu

img

குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தியதற்கு எதிர்ப்பு

எல்ஐசி முகவர்கள் போராட்டம்

சென்னை, நவ. 19 - குறைந்தபட்ச காப்பீ ட்டுத்தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தியதைக் கண்டித்தும் அதனை திரும்பப் பெறக் கோரியும் செவ்வா யன்று (நவ.19) சென்னை யில் எல்ஐசி முகவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (ஐஆர்டிஏ), அக்டோபர் மாதம் முதல் தேதியி லிருந்து, எல்ஐசி குறைந்த பட்ச காப்பீடு தொகையை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2  லட்சம் ரூபாயாக உயர்த்தி யுள்ளது. முகவர்களுக்கான கமிஷனையும், பாலிசி கள் எடுக்கும் அதிகபட்ச வயதையும் குறைத்துள் ளது. பீமா சுகம் என்ற செயலி மூலம் எல்ஐசி பாலிசி தாரர்களை தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு மடைமாற்றம் செய்ய முயற்சிக்கின்றனர்.  இதனைக்கண்டித்து அகில இந்திய எல்ஐசி முக வர்கள் சங்கத்தின் (லிகாய்) சென்னை கோட்டங்கள் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அ.சவுந்தரராசன்

அப்போது செய்தியா ளர்களிடம் பேசிய சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்தர ராசன், “எல்ஐசி வளர்ச்சிக்கு அடித்தளமாக முகவர்களின் கமிஷனை குறைப்பதன் மூலம் அந்நிறுவனத்தை பலவீனப்படுத்துகிறார்கள். வசதி குறைந்தவர்கள் பாலிசி எடுக்காமல் இருக்க குறைந்தபட்ச தொகையை உயர்த்தி உள்ளனர். எல்ஐசி பாலிசிகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பது கேவலம். அதை நீக்க வேண்டும். ஒன்றிய அரசு, ஐஆர்டிஏ, எல்ஐசி நிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டும்” என்றார். எல்ஐசி இணையதளம் முழுமையும் இந்தியில் மாற்றப்பட்டது குறித்து எழுப்பிய ள்விக்கு பதி லளித்த அவர், “பல மொழிகள் பேசும் இந்தியா வில் இந்தியை திணிக்கின்ற னர். அந்தந்த மாநில மொழி களிலும், இணைப்பு மொழி யான ஆங்கிலத்திலும் இணையதளங்கள் இருந்ததை, முழுவதும் இந்தியாக மாற்றியிருப்பது ஏற்கத்தக்கது அல்ல. இத னால் கடுமையான போரா ட்டங்கள் உருவாகும். இந்தி திணிப்புக்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டம் வலுவடைந்து வருகிறது” என்றார். எஸ்.ஏ.கலாம் லிகாய் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏ.கலாம், “11 லட்சம் முகவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வேலையை ஒன்றிய அர சும், ஐஆர்டிஏ நிர்வாகமும் செய்கின்றன. முகவர்களின் கமிஷன் தொகையை குறைக்கக் கூடாது. பாலிசி கள் மீதான 18 விழுக்காடு ஜிஎஸ்டியை  நீக்க வேண்டும், பாலிசிகளுக் கான போனஸ் தொகையை உயர்த்த வேண்டும். குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகையை ஒரு லட்சம் ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும், பாலிசி எடுப்ப தற்கான அதிகபட்ச வயதை 65ஆக உயர்த்த வேண்டும். கமிஷனை திரும்பப் பெறும் முறையை கைவிட வேண்டும்” என்றார்.

கையெழுத்து இயக்கம் 

இதனை தொடர்ந்து, டிசம்பர் 10 ஆம் தேதி வரை கோட்டம் வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். டிசம்பர் 11 ஆம் தேதி முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு கோரப்படும். டிசம்பர் 20 - பிப்ரவரி 10  வரை கையெழுத்து இயக்கம் நடைபெறும்.  பிப்ரவரி 11 அன்று தில்லியில் நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டமும், நிதி அமைச்சகத்திடம் ஒரு கோடி கையெழுத்துக்களுடன் மனு கொடுக்கும் இயக்க மும் நடைபெறும் என்று  ஆர்ப்பாட்டத்தில் தெரி விக்கப்பட்டது. சென்னை கோட்டம்-2 இன் தலைவர் எம்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநிலத் தலைவர் ஏ.பூவலிங்கம், பொருளாளர் கே.தாமோ தரன் உள்ளிட்டோர் பேசினர் தென்மண்டல தலைவர் ஏ.வி.பெல்லார்மின் நிறை வுரையாற்றினார்.