tamilnadu

img

திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் நீதிமன்றம் திறப்பு

கடலூர்,நவ. 30- ரயில் நிலையம் மற்றும் ரயில்க ளில் நடைபெறும் குற்ற சம்பவங்கள்  தொடர்பான வழக்குகளை விசாரிக்க  கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில்  நிலையத்தில் நீதிமன்றம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி ஜவஹர் தலைமை தாங்கி நீதிமன்றத்தை திறந்து  வைத்தார். நீதிபதிகள் உத்தமராஜா, பிரகாஷ், ஆனந்தன், சுதா, ரகோத்த மன், வனஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பார் அசோசியேஷன் தலைவர் பாலகிருஷ்ணன், செயலா ளர் சுரேஷ்குமார், பொருளாளர் பாபு, லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் வனராசு பொருளாளர் யுவராஜா,  வக்கீல்கள் பிரேம்குமார், சுப்பிர மணியன், அரசு வக்கீல் ராமன், மயிலாடுதுறை ரயில்வே சீனியர் கமாண்டர் ராமகிருஷ்ணன், ஆய்வா ளர் சுதீப் குமார் ராஜகோபால் மற்றும் வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரபாகரன் நன்றி கூறினார்.