tamilnadu

img

ஊட்டி பூண்டு விலை கிலோவுக்கு 60 ரூபாயாக வீழ்ச்சி

ஊட்டி பூண்டு விலை  கிலோவுக்கு 60 ரூபாயாக வீழ்ச்சி 

உருளைக்கிழங்கு, கேரட் போன்ற மலை காய்கறி சாகு படியில் முக்கிய பங்கு வகிக்கும் நீலகிரியில் பூண்டும்  அதிகள வில் பயிரிடப்படுகிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பூண்டு பயி ரிட்டு வருகின்றனர். கூடுதல் மணம் மற்றும் காரத்தன்மை அதிகம் கொண்டிருக்கும் ஊட்டி பூண்டிற்கு வடமாநிலங்களில் அதிக கிராக்கி உள்ளது. இந்நிலையில், ஊட்டி பூண்டின் விலை கடந்த 6 மாதங்க ளில் கிலோ 350 முதல் 400 ரூபாயாக விற்கப்பட்டு வந்தது. ஆனால் விளைச்சல் அதிகரிப்பு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து வரும் பூண்டு போட்டியின் காரணமாக ஊட்டி பூண்டு விலை வீழ்ச்சியடைந்து ரூ.60 என மிக மோச மான அளவில் சரிந்துள்ளது. 

விலை வீழ்ச்சிக்கான காரணங்கள்

நீலகிரி மாவட்டத்தில் பூண்டு சாகுபடி செய்த விவசாயிக ளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நல்ல லாபம் கிடைத்ததால் மற்ற பயிர்களை விளை வித்து வந்த பெரும்பாலான விவசாயிகள் பூண்டு சாகுபடிக்கு மாறியுள்ளனர். இதனால் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதி களில் பூண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது.  நீலகிரியில் விளைவிக்கப்படும்‌ பூண்டை விற்பனை செய்ய மேட்டுப்பாளையத்தில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழ மைகளில் மொத்த ஏல மண்டிகளில் ஏலம் நடைபெறுகிறது. இத்தகைய சூழலில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் இருந்து ஒற்றைப் பூண்டுகளின் வருகை மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் அதிகரித்துள்ளது. விளைச்சல் அதிகரிப்பு மற்றும் வெளிமாநில பூண்டு வருகையின் காரணமாக ஊட்டி பூண்டின் விலை கடுமையாக சரிந்துள்ளது. 

விவசாயிகள் கவலை

விலை வீழ்ச்சி தொடர்பாக ஊட்டி பூண்டு விவசாயிகளான எம்.எல்.எஸ்.பிரகாஷ் (பெம்பெட்டி) மற்றும் எஸ். மாரப்பன் (குலிசோலை) ஆகியோர் கூறுகையில்,”ஊட்டி பூண்டு விலை சரிவால் ஒரு ஏக்கருக்கு 2 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள் ளது. குத்தகை, உரம், விதை போன்ற செலவுகளை கணக்கில் கொண்டால் பெரும் இழப்பு ஆகும். 500 முதல் 600 கிலோ வரையிலான அதிகப்படியான விளைச்சல் கிடைப்பதால், பூண்டு மூட்டைகளை சேமித்து வைப்பது இயலாத காரியம் ஆகும். அதனால் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டா யம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நல்ல லாபம் கிடைத்ததால் பலர் பூண்டு சாகுபடிக்கு திரும்பினர். இதனால் தற்போது விளைச்சல் அதிகமாகி, விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோல் விலை வீழ்ச்சி நடந் தது. ஆனால்  இம்முறை ஏக்கருக்கு 2 லட்சம் ரூபாய் நஷ்டம் என மிக மோசமான அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என கவலை யுடன் கூறினர்.