tamilnadu

கோட்டூர் சோழா பயிற்சி மையத்தில் குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்

கோட்டூர் சோழா பயிற்சி மையத்தில் குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே, கோட்டூரில் மாரிமுத்து எம்எல்ஏ-வின் முயற்சியில் சோழா இலவச போட்டி தேர்வு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.  இங்கு சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வருகிற ஜூலை மாதம் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு, தேர்வர்களை தயார் படுத்திடும் வகையில் நேரடி மற்றும் ஆன்லைன் மாதிரி தேர்வு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.  இதுகுறித்து, பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் லெனின் பாபு கூறுகையில், வருகிற ஜூலை மாதம் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்காக நேரடி மற்றும் ஆன்லைன் மாதிரி தேர்வு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மற்றும் பொது அறிவுக்கு, தனித்தனியாக தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தின்படி, மாதிரி வினாத்தாள்களை போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும், அனுபவம் வாய்ந்தவர்கள் தயாரித்துள்ளனர்.  இலவசமாக வழங்கப்படும் இந்த வாய்ப்பை தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.