சென்னை, மே 7- விசாரணைக் கைதி விக்னேஷ் கொலை வழக்கு தொடர்பாக 6 காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, உயிரிழந்தார். இத னைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபி சிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட னர். இந்நிலையில் விசாரணைக் கைதி விக்னே ஷின் உடலில் 13 இடங்களில் காயம் உள்ள தாக உடற்கூராய்வு அறிக்கை மூலம் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து நடத்திட சிபிசிஐடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்த ரவிட்டார். இதன்படி சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, மே 6 அன்று 9 காவலர்களிடம் நேரில் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து இந்தக் கொலை வழக்கில் தலைமைச் செயலக காலனி நிலைய எழுத்தர் முனாப், காவலர் பவுன்ராஜ் ஆகி யோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதில் மேலும் தலைமை காவலர் குமார், ஊர்காவல்படை காவலர் தீபக் மற்றும் 2 ஆயு தப்படை காவலர்கள் கைதாகியுள்ளனர். கைதான 6 காவலர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டப் பிரிவுகளின் கீழ் சிபி சிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.