tamilnadu

img

அமெரிக்க நாடாளுமன்றம் தாக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தி!

2020 நவம்பரில் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனி ற்கும் டொனால்டு டிரம்ப்க்கும் இடையே போட்டி நிலவியது.ஜோ பைடன் வெற்றி பெற்றார். அதற்கான வாக்கு எண்ணிக்கை, சான்றளிக்கும் நடைமுறைகள் 2021 ஜனவரி ஆறில் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்திற்குள் நிறைவேறிக் கொண்டிருந்தன.  அப்போது டொனால்டு டிரம்ப்பினால் தூண்டிவிடப்பட்ட 2500 க்கும் மேல் குண்டர்கள் மூன்றடுக்கு பாதுகாப்பையும் மீறி வளாகத்திற்குள் திடீரென நுழைந்தனர். அவர்கள் தங்களை சோஷலிஸ்டுகள் எனக் கூறிக் கொண்டனர். இவர்கள் கருப்பு இன மக்களாக, லத்தீன் அமெரிக்க மக்களாக இருந்திருந்தால் அரசு அடக்குமுறை மூலம் பல துயர சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும். 725 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டு கைதாகியுள்ளனர். வாக்கு எண்ணிக்கையை தடுத்து நிறுத்துமாறு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த டொனால்ட் ட்ரம்ப் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. நடந்த தேர்தலில் மோசடி நடந்ததாகவும், வாக்கு இயந்திரங்களில் மோசடி, சர்வதேச கம்யூனிஸ்ட் சதி இருந்ததாம்! அமெரிக்க ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடான அமைதியான ஆட்சி மாற்றத்திற்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் செயல்பட்டார். நாடாளுமன்ற தாக்குதல் நடந்த ஓராண்டு நினைவு தின பத்திரிகை நிருபர் கூட்டத்தை திடீரென ரத்து செய்தார். ஜோ பைடன் பதவியேற்று ஓராண்டு முடிந்துள்ளது. விஞ்ஞான ரீதியில் கொரானாவை எதிர்க்கப் போவதாகவும் அதை கட்டுக்குள் கொண்டு வரப்போவதாகவும் வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது ஒமைக்ரான் பாதிப்பிற்கு பிறகுமுடிவுகள் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.