tamilnadu

img

மதவெறி சக்திகளை வலுவாக எதிர்த்து முறியடிப்போம்!

சென்னை, ஜூலை 15 - “மதவெறி சக்திகளை வீழ்த்தும் போராட்டத்தை வலுவாக மேலும் முன்னெடுத்துச் செல்வோம்!” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறினார். விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடியுமான தோழர் என். சங்க ரய்யாவின் 103-ஆவது பிறந்த நாள் திங்களன்று (ஜூலை 15) கொண்டா டப்பட்டது. இதனையொட்டி சென்னை குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப் பட்டிருந்த உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ் ணன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் ப. செல்வசிங், என். குணசேகரன், எஸ். கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் பா. சுந்தர்ராஜன், வெ. ராஜசேகரன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், மத்திய சென்னை  மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் ச. லெனின், எஸ். குமார், ஜி. செந்தில் குமார், ம. சித்ரகலா, இரா. முரளி, இ.  சர்வேசன், மாவட்டக்குழு உறுப்பி னர் எம். தாமோதரன், தா. கிருஷ்ணா,  எஸ். அரிகிருஷ்ணன், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி. பிரபா கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், “உழைக்கும் வர்க்கத்தின் மகத் தான தலைவர் என். சங்கரய்யாவின் 103வது பிறந்த நாளில் அவருக்கு செவ்வஞ்சலி செலுத்துகிறோம். அவர் கடைப்பிடித்த லட்சியத்தை முன்னெடுத்துச் செல்ல எங்களை அர்ப்பணித்துக் கொள்ள உறு தியேற்கும் நிகழ்வாக இந்நாளை கருதுகிறோம்.

இன்றைக்கு நாட்டின் ஆட்சியதி காரத்தில் இருந்து ஆட்டிப் படைக் கும் மதவெறி சக்திகள், அன்றைக்கு விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தது. தற்போது, சுதந்திரத்தை சிதைக்கிற வேலை களை செய்கிறது. அரசியல் சாசன விழுமியங்கள், நாடாளுமன்ற ஜன நாயகம் அனைத்தையும் காவு கொடுக்கிறது. மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தாலும், சந்தர்ப்ப வாத கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளது. பல மாநி லங்களில் நடைபெற்ற 13 தொகுதி களுக்கான சட்டமன்ற இடைத்தேர் தல்களில் 10-இல் தோல்வியடைந் துள்ளது. எனவே, இந்திய சுதந்தி ரத்திற்கு ஏற்பட்டுள்ள சோதனைக் காலம் விரைவில் முடிவடைகிற நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பாஜகவையும், மதவெறி சக்தி களையும் வீழ்த்துகிற மகத்தான போராட்டத்தை வலுவாக முன்னெ டுத்துச் செல்வோம்” என்றார்.

அமைச்சர் அஞ்சலி

சிறு-குறு நடுத்தர தொழில் நிறு வனங்கள் துறை அமைச்சர் தா.மோ.  அன்பரசன், இ. கருணாநிதி எம்எல்ஏ, தாம்பரம் மாநகராட்சி 2- ஆவது மண்டலக் குழுத் தலைவர் ஜோசப் அண்ணாதுரை, 28-வது  வார்டு உறுப்பினர் ஜி. விஜயலட் சுமி உள்ளிட்டோரும் தோழர் என். சங்கரய்யா படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.