இந்தியா போஸ்ட் வங்கியில் அதிகாரிப் பணியிடங்கள்
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் வங்கியில் 51 அதிகாரிகள்(Executive) நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. 21 வயது முதல் 35 வயது வரையிலான இளநிலைப் பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படியான தளர்ச்சி உண்டு. இப்பணிகளை நிரப்புவதற்கு எழுத்துத் தேர்வு இல்லை. பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள், ஏற்கனவே GDS மற்றும் போஸ்ட் வங்கியில் பணிபுரிந்த அனுபவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வின்போதே சான்றிதழ் பரிசீலனையும் நடைபெறும். மாநில வாரியான காலிப் பணியிடங்கள் அறிவிக்கையில் தரப்பட்டிருக்கிறது. அறிவிக்கை மற்றும் விண்ணப்பப்பிதற்கான இணைப்பு ஆகியவற்றை https://www.ippbonline.com என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித்தேதி : மார்ச் 21, 2025
மத்திய காவல்படைகளில் 1,376 பணியிடங்கள் - சிஐஎஸ்எப்(CISF)
மத்தியத் தொழிற்சாலை பாது காப்பு படை என்பது மத்திய காவல்படைகளில் ஒன்றா கும். இதில் கான்ஸ்டபிள் பணிக்கு 1,161 இடங்களை நிரப்பப் போகிறார்கள். குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு படித்தி ருக்க வேண்டும். சில தொழிற்பிரிவுக ளுக்கு மட்டும் பத்தாம் வகுப்போடு, ஐடிஐ யில் சான்றிதழுக்கான படிப்பும் நிறைவு செய்திருப்பது அவசியம். சமையற்காரர், செருப்பு தைப்பவர், தையற்காரர், முடி திருத்தம் செய்பவர், சலவை ஊழியர் உள்ளிட்ட பணியிடங்க ளை நிரப்புவதற்கான இந்தத் தேர்வு க்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 18 வயது முதல் 23 வயது வரையில் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினரு க்கு அரசு விதிமுறைகளின்படி தளர்ச்சி உண்டு. ஆண்கள் குறைந்தபட்சம் 165 செ.மீ. உயரமும், பெண்களுக்கு குறைந்தபட் சம் 155 செ.மீ. உயரமும் இருக்க வேண் டும். இதில் பழங்குடி விண்ணப்பதாரர்க ளில் ஆண்களுக்கு 162.5 செ.மீ. உயரம் இருந்தால் போதுமானது. ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் சான்றி தழ் பரிசோதனை என்ற வகையில் தேர்வு முறை இருக்கும். வினாக்கள் 10 ஆம் வகுப்பு தகுதி அடிப்படையில் அமையும். முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 113 பணி யிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிரப்ப கடைசித்தேதி ஏப்ரல் 3, 2025 ஆகும். கூடுதல் விபரங்க ளுக்கு www.cisfrectt.cisf.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். இந்தோ-திபெத்திய எல்லைப்படை(ITBP) தொழில்நுட்பப் பணியாளர்களுக் கான 215 காலிப் பணியிடங்களை நிரப்ப இந்தோ-திபெத்திய எல்லைப்படை முடிவு செய்துள்ளது. அதிகபட்ச வயது வரம்பு 23 ஆகும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தளர்ச்சி உண்டு. பத்தாம் வகுப்பு படித்தி ருப்பதோடு, ஐடிஐ சான்றிதழ் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். நேரடி ஆட்சேர்ப்பு முகாம்களில் எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, உடல்திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் சான்றி தழ் சரிபார்ப்பு ஆகியவை நடத்தப்படும். கூடுதல் விபரங்களுக்கும், விண்ணப்ப இணைப்பிற்கும் www.recruitment. itbpolice.nic.in என்ற இணையதளத் தைப் பார்வையிடலாம். 3 விண்ணப்பிக்கக் கடைசித் தேதி மார்ச் 22, 2025 ஆகும்.