மதுரை, மார்ச் 24 - அனைத்து கடன்கள் மீதான மாத தவணைகளுக்கு மூன்று மாத விலக்கு அளிக்கக்கோரி மத்திய நிதி யமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கோவிட் 19 காரணமாக சமூகத்தின் பல பிரிவினரும் பாதிக்கப் பட்டுள்ளனர். சிறு தொழில் புரிவோர், சுயதொழில் செய்வோர், வியா பாரிகள், விவசாயிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஏழை எளியோர் ஆகி யோர் பெரும் வருமான இழப்பிற்கு ஆளாகிற அபாயம் ஏற்பட்டுள்ளது. அமைப்பு சார் துறைகளை சார்ந்தோர் கூட ஊர் முடக்கம் காரணமாக கூடு தல் செலவினங்களுக்கு ஆளாகிற சூழல் உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும் அச்சுறுத்துகிறது. எப்போது நிலைமை கட்டுக்குள் வரும் என்ற நிச்சயமற்ற சூழலும் நிலவுகிறது. இத்தகைய அசாதாரண சூழலில் இவர்கள் அரசு வங்கிகள், தனியார் வங்கிகள், அந்நிய வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள், கிராமிய வங்கி கள், கூட்டுறவு வங்கிகள், வங்கி அல்லா நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அமைப்புகளில் பல்வேறு தேவைகளுக்காக - தொழில், வீடு, வியாபாரம்,விவசாயம், கல்வி, நுகர்வு பொருள்- வாங்கியுள்ள கடன் தவணைகளை உரிய காலத்தில் கட்ட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே அனைத்து கடன்கள் மீதான மாத தவணைகளை (இ.எம்.ஐ) கட்டுவதற்கு மூன்று மாத விடுமுறையை அளிக்க ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன். இக் கடன்கள் செயல்படா சொத்துக்களாக கருதப்படுவதையும், கடன் தவணை செலுத்த தவறியோராக “சிபில்” அறிக்கையில் இடம் பெறுவதையும் தவிர்க்குமாறும் இதற்கான முடிவை விரைவில் எடுத்து அறிவிக்குமாறும் வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.