tamilnadu

img

தனை ஈந்து “தமிழ்நாடு” தந்தவர் - காலத்தை வென்றவர்கள்

சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்பதுள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து விருது நகர் தேசபந்து மைதானத்தில் 1956 ஜூலை 27 -இல் உண்ணாவிரதப் போராட்டத்தை சங்கரலிங்கனார்  துவங்கினார். அவரது போராட்டத்து க்கு பாதுகாவலாக கம்யூனிஸ்ட் கட்சி  இருந்தது. அன்றைய ஆட்சியாளர் கள் சங்கரலிங்கனாரின் கோரிக் கையை ஏற்காததால் போராட்டம் இரண்டு மாதத்தைத் தாண்டியது. அக்.13 அன்று  78 ஆம் நாள் மருத்து வமனையில் அவரது உயிர் பிரிந்தது. தனது உடலை கம்யூனிஸ்ட்டுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்ததால் மதுரையில் கேடிகேதங்கமணி, கே.பி. ஜானகியம்மாள்   பெற்று அவருக்கு இறுதி நிகழ்ச்சியும் மரியாதையும் செய்யப்பட்டது.  1968 ஜூலை 18-இல் தமிழக சட்டமன்றத்திலும் 1968 நவ.23-இல் நாடாளு மன்றத்திலும் ‘தமிழ்நாடு’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1968 டிச.1இல் பெயர் மாற்ற விழா நடந்தது. ‘தமிழ் நாடு’ பெயருக்காக தன்னுயிர் நீத்த தகைமையாளர் தியாகி சங்கரலிங்கனார் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.