கொடுமுடி பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி
ஈரோடு, மார்ச் 22- ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சியின் தலைவர் சு. திலகவதி மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மா னம் வெற்றி பெற்றது. கொடுமுடி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள் ளன. இதில் திமுகவை சேர்ந்த 8 கவுன்சிலர்கள், காங்கிரசை சேர்ந்த 3 கவுன்சிலர்கள் மற்றும் 3 சுயேட்சை கவுன்சிலர் கள் உள்ளனர். பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த சு. திலகவதி பதவி வகித்து வந்தார். பேரூராட்சி தலைவரின் செயல்பாடுகளில் அவரது கண வர் சுப்பிரமணியின் தலையீடு இருப்பதாக கவுன்சிலர்கள் குற் றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு சென்றது. நீதிமன்ற உத்தரவின்படி, வெள்ளியன்று நம்பிக்கையில்லா தீர்மானத் தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பேரூராட்சி தலைவர் சு. திலகவதி, திமுக கவுன்சிலர் முருகானந்தம் மற்றும் சுயேட்சை கவுன்சிலர் சர வணசாமி ஆகியோர் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் பங் கேற்ற 12 கவுன்சிலர்களும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்க ளித்தனர். இதனால் ஆளுங்கட்சியை சேர்ந்த சு. திலக வதி தோல்வியடைந்தார். தற்போது ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சியினரி டையே சமாதான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது குறித்து பேரூராட்சிகளின் துணை இயக்குனரிடம் கேட்ட போது, இந்த கோப்பு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அரசு வெளியிடும் அரசாணையின்படி நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இந்தி ஆதிக்கம், புதிய கல்விக்கொள்கை ஏற்க மாட்டோம்: கருத்தரங்கம்
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் இந்தி ஆதிக் கம், புதிய கல்விக்கொள்கை ஏற்க மாட்டோம் என்ற தலைப் பில் சிறப்பு கருத்தரங்கம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி மதிமுக அலுவல கத்தில் வெள்ளியன்று நடைபெற்ற இந்த நிகழ்வில், பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் கல்வி யாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தந்தை பெரியார் திராவி டர் கழக பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் மூ.அன்பு, தாலுகா குழு உறுப்பினர் கே மகாலிங் கம், தபெதிக சார்பில் வெ. ஆறுச்சாமி, திமுக சார்பில் இரா. நவநீதகிருட்டிணன், தபெதிக இரா. மனோகரன், அகில் குமர வேல், காங்கிரஸ் வே.காளிமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ச.பிரபு உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனியன்று, மூன்றாவது சர்வதேச கருத்தரங்கில் இலங்கை பொருளாதார நிபுணரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியருமான அமிர்தலிங்கம் பங்கேற்று இந்தியா மற்றும் இலங்கைக்குக் இடையிலான பொருளாதார மேம்பாடுகள் குறித்து உரையாற்றினார். முன்னதாக, கருத்தரங்க மலரை வெளியிட்டார்.
உடுமலை - மூணாறு சாலை விரிவாக்கம் செய்ய கோரிக்கை
திருப்பூர் மாவட்டம், உடுமலை - மூணாறு சாலையில் வன விலங்குகள் அடிக்கடி சாலையை கடந்து செல்வதால், வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தின் எல்லைப்பகுதியான மழைப்பகுதியில் சின் னாறு வரை குறுகிய சாலையாக உள்ளது. உடுமலை 9/6 செக்போஸ்ட் பகுதியில் இருந்து சின்னாறு வரை மழைப்பகுதி யில் செல்லும் சாலைகளில் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் பருக செல்லும் முக்கிய இடமாக உள் ளது. இந்நிலையில் குறுகிய சாலை பகுதியாக உள்ளதை விரி வாக்கம் செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத் தும் வனத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தற் போது வரை விரிவாக்கம் செய்யாமல் உள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், “உடுமலை 9/6 செக்போஸ்ட் பகுதியில் இருந்து சின்னாறு வரை சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரம் மலைப்பகுதியில் சொல்லும் சாலை ஒரு வாகனம் செல்லும் வகையில் உள்ளது. சிறிய சாலையை அகலப்படுத்த வேண்டும். மேலும் மழைக்கு சாலைகளின் இருபுறமும் குழி ஏற்பட்டு உள்ளதால் வாகனங்களை இறக்கி ஓட்ட முடியாது. இந்நிலையில் காட்டு யானைகள் உணவு தேவைக்கு சாலைகளை கடந்து செல்லும் போது வாகனங்களை திருப்பி எடுக்க முடியாமல் அங்கேயே பயத்துடன் நிற்க வேண்டி உள்ளது” என்றனர். உடுமலை மூணாறு செல்லும் மிக முக்கிய சாலை வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் சாலை விரி வாக்கத்தை உடனடியாக செய்ய வேண்டும் என்பதே அனை வரின் கோரிக்கையாக உள்ளது. இதனை வனத்துறை நிறைவேற்றும் என்று வாகன ஓட்டிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.