சென்னையில் செய்தியாளர் களை சந்தித்த தமிழக மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை 45 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் பயன் பாட்டிற்கு வர இருக்கிறது. இன்னு யிர் காப்போம் திட்டம் தொடங்கப் பட்டதற்கான பிறகு இதுவரை 3 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் உயிர் காப்பாற்றப் பட்டுள்ளனர். ரூ.283 கோடி இதற்காக செலவிடப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிரத்தில் காணப்படக்கூடிய ஜிபிஎஸ் நோய் பாதிப்பு தமிழ்நாட்டிற்கு வருவதற்கு வாய்ப்பில்லை. வந்தாலும் அதை எதிர் கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் சுகாதாரத் துறை எடுக்கும்.பொண்ணுக்கு வீங்கி நோய்க்கான தடுப்பூசியை தேசிய தடுப்பூசி பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரை நேரில் சந்திக்கும்போது வலியுறுத்தப் படும். அவரை சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.