பினராயி விஜயனைச் சந்தித்த நிர்மலா சீதாராமன்
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, தில்லியில் உள்ள கேரள இல்லத்தில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதனன்று (மார்ச் 12) காலை 9 மணிக்கு நேரில் சந்தித்தார். கேரள ஆளுநர் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மற்றும் மாநில அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி பேராசிரியர் கே.வி. தாமஸ் ஆகியோர் உடனிருந்தனர். நிதியமைச்சரின் வருகை அதிகாரப்பூர்வமற்றது. உரையாடலுக்குப் பிறகு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேரள இல்லத்தில் உணவை முடித்துக் கொண்டு திரும்பினார்.