கடலூர், ஜூலை 30- கடலூரில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் “வள்ளலார் 200 வது” ஆண்டு விழா, அரசியல் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங் கேற்ற மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு:- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வள்ளலாரை ஏன் கொண்டாடுகிறது என்று சிலர் கேட்கின்றனர். சனாதனவாதிகள் சொல்லும், சாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கிற போராட் டத்தில் வள்ளலாரும் ஈடுபட்டார். வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்து கடும் சமர் புரிந்தார். குறிப்பாக, 150 ஆண்டு களுக்கு முன்பு அறிவியல் வளர்ச்சி பெறாத காலத்தில் கண்மூடி பழக்க மெல்லாம் மண்மூடி போக வேண்டும் என்று சொன்னவர் வள்ளலார். “பெருநெறி பிடித்தொழுக வேண்டும், மதமெனும் பேய் பிடியாது இருக்க வேண்டும்”என்று சொன்ன வர் வள்ளலாளர்.
இவரை எப்படி சனா தனத்தின் உச்சம் என்று ஆளுநர் ஆர்.என். ரவி சொல்கிறார். இதன் மூலம் பகுத்தறிவு இல்லாதவர் ஆளுநர், சனா தனத்தை பற்றியும் அவருக்கு தெரியவில்லை. அருட்பெருஞ் ஜோதி கொள்கையை பற்றி ரவிக்கு தெரியாது. சனாதனத்தின் அடிப் படையே வர்ணாசிரம தர்மம். சமூகத் தில் பிடித்திருக்கிற சாதிய ஏற்றத் தாழ்வு, நான்கு வர்ண முறையே. இன்றைக்கு இந்தியாவை ஆட்டிப் படைத்து வருகிறது இந்த வர்ண முறை. பிராமணருஐக்கு ஒரு நீதி, பட்டி யலின மக்களுக்கு இன்னொரு நீதி என்கிற அநீதியை எதிர்த்து போராடி யவர் வள்ளலார். நான்கு வர்ண முறையை நான் தான் படைத்தேன். நான் நினைத்தால் கூட அதை மாற்ற முடியாது என்று பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறிய தாக சொல்கிறார்கள். ஆனால், அந்த நான்கு வர்ண முறையை மாற்றிக் காட்டும் இயக்கம்தான் செங்கொடி இயக்கம். எனவேதான், ஆன்மீகவாதிகளாக இருந்தாலும் சமூக சிந்தனையாளர் களாகவும் மத ஒடுக்குமுறைகளை எதிர்ப்பவர்களாகவும் இருப்ப வர்களை எப்போதும் கொண்டாடும் இயக்கம்தான் செங்கொடி இயக்கம்.
நெய்வேலி பிரச்சனைக்கு தீர்வு என்ன?
நெய்வேலியில் பாமக நடத்திய போராட்டத்தையொட்டி பேருந்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலை வருத் தத்தை ஏற்படுத்துகிறது. எந்த ஒரு அரசியல் கட்சியும் போராட்டம் நடத்த நாட்டில் உரிமை உள்ளது. ஆனால், போராட்டம் நடத்து கிறோம் என்ற பெயரில் வன்முறையை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு இடை யூறு ஏற்படுத்துவதை ஒரு இயக்கம் செய்கிறது என்று சொன்னால், மாவட்ட நிர்வாகம் ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது? கடலூர் மாவட்டத்தில் 4 நாட்க ளாக பதற்றம் நிலை நீடித்து வருகிறது. 25க்கும் மேற்பட்ட பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. பேருந்தை சேதப்படுத்தி பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்து வதுதான் நோக்கம் என்றால், அந்தப் போராட்ட நடைமுறை யை சிபிஎம் உறுதியாக எதிர்க்கும். விவசாயிகளுக்கு நியாயம் வேண்டுமென்று போராடுவதற்கு உரிமை உள்ளது. 6 மாதங்களுக்கு முன்பு இதே நெய்வேலியில் மார்க் சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகளிலிருந்து 10,000 த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பேரணி நடத்தினோம்.
அதன் பிறகு நானும் திருமா வளவன், முத்தரசன், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகி யோரும் முதல்வரை சந்தித்து விவ சாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதன் பிறகு தான் அமைச்சர்கள், எம்எல்ஏ நிறுவனத்துடன் பேசி நஷ்ட ஈடு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட தீர்வு காணப்பட்டது. நெய்வேலி நிறுவனம் தொடங்கி யதில் இருந்து விவசாயிகளுக்காக போராடிய இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இன்று சில பேர் பேருந்துகளை உடைத்து போராட்டம் நடத்துகின்றனர். நெய்வேலி நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும், விவசாயிகளுடைய பிரச்சனையை தீர்க்க ஆக்கப்பூர்வமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கடலூர் தேரடி தெருவில் நடந்த பொதுக் கூட்டத்திற்கு மாநகர செய லாளர் ஆர்.அமர்நாத் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பி னர்கள் எஸ்.கே.பக்கிரான், ஆர்.ஆளவந்தார், ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவாணன், வி.உதயகுமார், பி.கருப்பையன், வி.சுப்பராயன், ஆர்.ராமச்சந்திரன், ஜி.ஆர்.ரவிச்சந்திரன், பி.தேன்மொழி, ஜே.ராஜேஷ் கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். சிப்காட் செயலாளர் எம்.சிவானந்தம் நன்றி கூறினார். முன்னதாக அறிவியல் கலைக் குழுவின் தப்பாட்டம் - கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றது.