தங்க நகைகளை அடகு வைப்பதற்கு புதிய விதிமுறைகள்
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சென்னை, மே 20- தங்க நகைகளை அடகு வைப்பதற்கு புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. விதிமுறைகள் தங்க நகையின் மதிப்பில் 75 சதவீத தொகை மட்டுமே கடன் வழங்கப்படும். அடமானம் வைக்கப்படும் நகைகளுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். வங்கிகள்(அ) வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் தங்கத்திற்கான தூய்மை சான்றிதழை வழங்க வேண்டும். தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கிகளில் வாங்கிய தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும். வெள்ளி பொருட்களுக்கு கடன் வழங்க ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ள நிலையில், ஒரு கிலோவுக்கு குறைவாக உள்ள நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்க அனுமதி வழங்கியுள்ளது. அடகு வைக்கப்படும் நகைகள் 22 காரட் தங்கத்தின் விலையில் மட்டுமே மதிப்பிடப் படும். கடன் ஒப்பந்தத்தில் முழுமை யான விவரங்கள் இருக்கவேண்டும். அடகு வைக்கப்பட்ட தங்கத்திற்கான முழு தொகையையும் வாடிக்கை யாளர்கள் செலுத்திய 7 நாட்களுக்குள் நகைகளை திருப்பித் தர வேண்டும். தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கை யாளர்களுக்கு கடன் வழங்குபவர்கள் 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.