புதிய இல்லம்: பெ. சண்முகம் திறந்து வைத்தார்
திருத்துறைப்பூண்டி, மே 17- திருவாரூர் மாவட்டம் திருத்துறை ப்பூண்டி பள்ளங்கோவில் செல்வமணி-தமிழ்சுடர் ஆகியோரின் புதிய இல்லத்தை, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், திறந்து வைத்து வாழ்த்தினார். டிவி. காரல்மார்க்ஸ் ஒன்றியச் செயலாளர் அனைவரையும் வரவேற்றார். டி. முருகையன் மாவட்டச் செயலாளர் தலைமை தாங்கினார். தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் ஐவி. நாகராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி. ஜோதிபாசு, தமிழ்மணி, கேஜி. ரகுராமன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ். சாமிநாதன், ஏகே வேலவன், கே.கோபு, ஆறு பிரகாஷ், முத்த உறுப்பினர் டேஸ்டி சுப்பிரமணியன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் வருகை தந்த அனைவருக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.