தஞ்சாவூர், ஜன.22 – அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், கட்டப்பட்டு வரும் பாலத்தில், ஹைட்ராலிக் ஜாக்கியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளா றால் கான்கிரீட் செக்மென்ட் ஒன்று கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில், கீழணை என அழைக்கப்படும் அணைக்கரை, கடலூர்- அரிய லூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில், கொள்ளிடம் ஆற்றில், கடந்த 1840ஆம் ஆண்டில், ஆர்தர் காட்டன் என்பவரால், இரண்டு அணைகள் கட்டப்பட்டன. 1854 ஆம் ஆண்டில், பாசன மதகுகளை, கண்காணிக்க அதிகாரிகள் வாகனங்களில் சென்று வர வசதியாக, 10 மீட்டர் அகலத்தில் உயர்மட்டப் பாலம் கட்டப்பட்டது. பின்னர், சென்னை – தஞ்சாவூர் பிரதான சாலையாக மாறியதால், அதிகளவில் கனரக வாகனங்கள் சென்றதால், கீழணை வலுவிழந்தது. கடந்த 2002 ஆம் ஆண்டு வல்லுநர் குழு ஆய்வு செய்து, பாலத்தில் கனரக வாக னங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரைத்தது.
ஆனால், அப்ப ரிந்துரையை தமிழக அரசு ஏற்காமல், தொடர்ந்து கனரக வாகனங்கள் சென்றதால், 2008 ஆம் ஆண்டில் பாலத்தில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டன. அதன் பின்னர், கனரக வாக னங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில், புதிய பாலம் கட்ட கோரிக்கை எழுந்தது. அப்போது, தஞ்சா வூர்– விக்கிரவாண்டி இடையே 165 கிலோ மீட்டர் தூரத்திற்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம், நான்கு வழி சாலையாக மாற்றும் பணி, கடந்த 2017ஆம் ஆண்டு 3.517 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு 3 பிரிவுகளாக, பணிகள் துவங்கப்பட்டன. அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் தத்து வாஞ்சேரி முதல் அரியலூர் மாவட்டம் தென்ன வநல்லூர் கிராமம் வரை, அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், சுமார் 1.2 கி.மீ., நீளத்திற்கு புதிய பாலத்துடன் 5 கி.மீ., நீளத்திற்கு புறவழிச்சாலை அமைப்பதற்காக திட்ட மிடப்பட்டு, சுமார் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகள், கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு நடந்து வரு கிறது.
இந்நிலையில், 20 கான்கிரீட் தூண்கள் ‘ஹைட்ராலிக் ஜாக்கி’ மூலம் பொருத்தப்பட்ட கான்கிரீட் செக்மென்ட்டினை, 16 மற்றும் 17 ஆம் தூணுக்கு ஜாக்கி மூலம் இணைக்கும் பணியில் 15 தொழிலாளர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஹைட்ராலிக் ஜாக்கியின் பிரஷர் குழாய் அறுந்து, பலத்த சத்தத்துடன் 15 அடி அகலமும், 50 மீட்டர் நீளமுள்ள கான்கிரீட் செக்மென்ட்டும் ஆற்றில் விழுந்தது. உடனே, தொழிலாளர்கள் தண்ணீரில் குதித்து உயிர் தப்பினர். இதில் புதிதாக கட்டப்பட்ட, கான்கிரீட் தூண்களும் மற்றும் பாலமும் சிறியளவில் இடிந்து சேதம் அடைந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், கட்டுமான நிர்வாகத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: “ஹைட்ராலிக் ஜாக்கியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கான்கிரீட் செக்மென்ட் ஒன்று ஆற்றில் விழுந்து சேதமடைந்துள்ளது. இதனால், பாலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விரைவில் அந்த பணிகள் சீர் செய்யப்பட்டு, பாலம் கட்டு மான பணிகள் தொடர்ந்து நடைபெறும்” இவ்வாறு தெரிவித்தார்.