தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், சனிக்கிழமையன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்த அமைச்சர்கள் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டனர். அவை வருமாறு:
ஏழு மாவட்டங்களில் தடுப்பணை: 285 கோடியில் அணைக்கட்டு சீரமைப்பு
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீர் வளத்துறை மானியக் கோ ரிக்கை மீதான விவாதங்களுக் குப் பிறகு பதிலுரை அளித்த அமைச்சர் துரைமுருகன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறிய தாவது: செங்கல்பட்டு, புதுக்கோட்டை, இராமநாதபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் 10 இடங்க ளில் அணைக்கட்டுகள் மற்றும் பகி ரணைகள் அமைக்கும் பணிகள் ரூ. 55 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். முக்கிய ஆறுகளில் வெள்ளக் காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், வெள்ளநீரின் தீவி ரத்தை கட்டுப்படுத்தவும் 7 மாவட்டங்க ளில் 10 இடங்களில் தடுப்பணைகள் அமைக்கும் பணி ரூ. 71 கோடியே 86 லட்சத்தில் மேற்கொள்ளப்படும். கடலூர், மயிலாடுதுறை, திரு வண்ணாமலை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 3 இடங்களில் தரைகீழ் தடுப்பணைகள் அமைக்கும் பணி ரூ.103 கோடியே 23 லட்சத்தில் மேற் கொள்ளப்படும். பாரம்பரிய நீர்பாசன கட்டுமானங்க ளான ஈரோடு மாவட்டத்தில் உள்ள காலிங்கராயன் அணைக்கட்டு மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழவூர் அணைக்கட்டுகளைப் புனரமைப்பு செய்யும் பணி ரூ.3 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் மேற் கொள்ளப்படும். பாசன நிலங்களுக்கு நீர் வழங்கு வதை உறுதி செய்யவும், நீர் வீணா வதை தடுக்கவும், நான்கு மண்டலங்க ளிலுள்ள 11 மாவட்டங்களில் உள்ள பழுதடைந்துள்ள 24 அணைக்கட்டு மற்றும் தடுப்பணைகளில் உள்ள புனரமைப்பு, மறுசீரமைப்பு மற்றும் மறு கட்டுமானப் பணிகள் ரூ.284 கோடி 70 லட்சம் மதிப்பீட்டில் மேற் கொள்ளப்படும். பாசன நிலங்களுக்கு நீர் வழங்கு வதை உறுதி செய்யவும், நீர் வீணா வதை தடுக்கவும், நான்கு மண்டலங்க ளிலுள்ள 13 மாவட்டங்களில் பழு தடைந்துள்ள 25 கால்வாய்கள், வழங்கு வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் போன்ற பாசன அமைப்புகளில் புனர மைப்பு, மறு சீரமைப்பு மற்றும் கட்டு மானம் செய்யும் பணிகள் ரூ.116 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் மேற் கொள்ளப்படும். வேலூர், கடலூர், திருவள்ளூர், சேலம், அரியலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பழுதடைந்துள்ள தரைப்பாலம், பாதுகாப்பு சுவர், கசிவுநீர் குழாய்களில் அடைப்பு நீக்கு தல் மற்றும் இதர கட்டுமானங்கள் புனரமைப்பு பணிகள் 11 எண்கள், ரூ. 42 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெட்ரோல் பங்க்
மானியக் கோரிக்கை விவா தத்தின் போது அமைச்சர் முத்துச்சாமி பேசியதா வது: திருவண்ணாமலை மற்றும் மதுரை மாவட்டத்திலுள்ள 2 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்கு சொந்த மான நிலங்களில் ரூ. 1 கோடியே 30 லட்சம் செலவில் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் (பெட்ரோல் பங்க்) அமைக்கப்படும். சென்னை, கோவை, திருச்சி, சேலம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங் களில் உள்ள 10 கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் நகைக்கடன் வழங்குவ தற்கு ஏதுவாக பாதுகாப்பு அறையுடன் கூடிய இரும்புப் பெட்டகங்கள் அமைக்கப்படும். ஈரோடு மாவட்டம், சம்பத் நகர் திட்டப் பகுதியில் பொது மற்றும் தனிநபர் பங்க ளிப்புடன் 3,741 ஏக்கர் நிலப்பரப்பில் வணிக வளாகம் மற்றும் நவீன வசதிகள் கொண்ட 108 அடுக்குமாடி குடியிருப்பு கள் கட்டப்படும். செங்கல்பட்டு கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள ஏ 1929 திருநகர் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் ஆகிய இரண்டு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு சொந்தமான நிலத்தில் வணிக வளாங்கள் கட்டப்படும். வாகன நிறுத்த கொள்கை! சென்னை பெருநகரப் பகுதியில் பெருகிவரும் வாகனங்களின் எண் ்ணிக்கையையும் அதனால் ஏற்படும் வாகன நிறுத்த தேவையையும் அறிந்து திறம்பட மேலாண்மை செய்திட புதிய வாகன நிறுத்த கொள்கை ஒன்று உரு வாக்கப்படும். மேலும் அண்ணா பல் கலைக்கழகத்தில் புதிய பாடப்பிரிவாக போக்குவரத்து திட்டமிடல் பட்ட மேற் படிப்பு அறிமுகப்படுத்தப்படும். புறநகர் ரயில் ஏசி சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் செல்லும் புறநகர் ரயில் பெட்டிகளில் ஏசி (குளிர் சாதனம்) வசதி செய்து கொடுக்கப் படும். இதற்காக, ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வேக்கு 12 பெட்டிகள் கொண்ட இரண்டு குளிரூட்டும் மின்மோட்டார் யூனிட்டுகள் ஒதுக்கியது. போதைக்கு எதிராக தீவிர பிரச்சாரம்! தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் அருந் துதல் மற்றும் போதைப் பொருட்கள் உட்கொள்ளுதல் ஆகியவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வருவாய், காவல், போக்குவரத்து,பள்ளிக் கல்வி, உயர் கல்வி ஆகிய துறைகளுடன் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறையும் இணை ந்து மாவட்டம் தோறும் விழிப்பு ணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சி யவர்கள் மற்றும் கள்ள மதுபான விற் பனையில் ஈடுபட்டு சிறு தண்டனை பெற்று விடுதலையாகி மனம் திருந்தியவர்க ளுக்கு மறுவாழ்வு நிதி வழங்கப்படும்.