திருநெல்வேலி, ஜன.28 - நெல்லை டவுன் கரியமாணிக்கபெரு மாள் கோவில் 800 ஆண்டுகள் பழமை யானது என கல்வெட்டு ஆய்வு மூலம் தெரிய வந்தது. திருநெல்வேலி மாவட்டம் டவுனில் உள்ள கரியமாணிக்க பெருமாள் கோவிலில் பிப்.10 அன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. இக்கோவிலின் பழமை குறித்து மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரி யர் சுதாகர், வரலாற்று துறை உதவி பேரா சிரியர் மணிவாணன், முருகன், மாணவி மீனா ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வில், இவ்வூருக்கு குலசேகர சதுர்வேதி மங்கலம் என்ற பெயரும் இறை வனுக்கு கரியமாணிக்கம் பெருமாள் என்ற பெயரும் இருப்பது தெரியவந்தது. இக்கோ வில் 800 ஆண்டுகள் பழமையான கோயில். குலசேகர பாண்டியனால் 12 ஆம் நூற்றாண் டில் கட்டப்பட்டது. நாயக்க மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்டது. இங்கு குலசேகர மங்கலத்து மகாசபை ஒன்று செயல்பட்டுள்ளது என்பதும், நிலம் தானம் கொடுத்த செய்திகள் இருப்பதும் ஆய்வில் தெரியவந்தது.