தமிழ்நாடு கால்நடை மருத்துவ ம் மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் சேர்க்கை பட்டியலில் முத லிடம் பிடித்துள்ளார். அரியலூர் மாவட் டம் பொய்யூர் மாணவர் ராகுல்காந்த். ராகுல் காந்த் குடும்பத்தில் தந்தை முருகேசன், தாய் தேவகி, சகோதரி டயனா உட்பட மொத்தம் நான்கு பேர் உள்ளனர். இன்றைக்கும் ஒரு ஓலைக் குடிசை வீட்டில் தான் வசித்து வருகின்றனர். சைக்கிள் பழுது நீக்கும் தொழிலாளியான முருகேச னின் தினசரி வருமானம் ரூ.300-ஐ தாண்டினால் பெரிய விஷயம். ராகுல் காந்தின் சகோதரி டயானா பி.எஸ்சி. முடித்துவிட்டு எம்.எஸ்சி. படிப்பதற்கு விண்ணப்பித்துள்ளார். ராகுல் காந்த் மற்றும் மகள் டயானாவின் கல்விச் செலவு மற்றும் குடும்பத் தேவைகளை தினசரி வரு மானத்தின் மூலம் தான் ஈடுகட்டு கிறார் முருகேசன். பல தருணங் களில் கல்விச் செலவை சமாளிக்க வட்டிக்கும் கடன் வாங்கியுள்ளார் ராகுல் காந்த் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது சிறுநீர்ப் பாதையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் திருச்சிராப்பள்ளி யில் உள்ள தனியார் மருத்துவமனை யில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். இருப்பினும் நோய் முழுமையாகக் குணமடைய வில்லை. அவ்வப்போது கடுமை யான வலியால் பாதிக்கப்பட்ட அவருக்கு மீண்டும் ஒரு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இத னால் அவர் ஒரு மாத காலம் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கீழப்பாலூரில் உள்ள சுவாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவரான இவர் ஆசிரியர்களின் உதவியுடன் பிளஸ் 2 பொதுத் தேர்வில் உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களுடன் 600க்கு 582 மதிப்பெண்கள் பெற்று பெற்றோரு க்குப் பெருமை சேர்த்துள்ளார். ராகுல் காந்த் படித்த பள்ளி இவரது குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு கல்விக் கட்டணத்தில் 50 சதவீதம் செலுத்தினால் போது மெனக் கூறியுள்ளது. ராகுல் காந்தின் கடின உழைப்பு, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு வீண் போகவில்லை. தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேரு வதற்கான தகுதிப் பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
பயிற்சி மையத்தில் படிக்க வசதியில்லை
சிறுநீர்ப் பாதைப் பிரச்சனை யைப் பற்றி நான் ஒரு போதும் கவலைப் பட்டதில்லை. படிப்பிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தினேன். நான் கால்நடை அறிவியல் கல்லூரியில் சேருவதற்கு முதல் மாணவராக தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார். என் மகன் எம்பிபிஎஸ் டாக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் நீட் தேர்வுக்கு தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்க வைக்கும் அளவிற்கு எனக்கு வசதி யில்லை. எனது மகனுக்கு சிறுநீர் பாதை பிரச்சனை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கும் அதற்குத் தேவை யான மதிப்பெண்களை நீட் தேர்வில் பெற்றிருப்பார் என்றார் தந்தை முருகேசன். பள்ளியின் நிர்வாக அதிகாரி என். சங்குபதி, கூறுகையில் ராகுல் காந்த் உயர்கல்வியைத் தொடர அவரது முழு கல்விச் செலவையும் மாநில அரசு ஏற்க முன்வரவேண்டும்என்றார். ராகுல் காந்தின் தாய் தேவகி கூறும்போது, ராகுல் காந்த் எப்போ தும் படித்துக் கொண்டே இருப்பான். கால்நடை மருத்துவத்தில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் தரவரிசை பட்டியலில் முத லிடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி யளிக்கிறது. எனது மகனால் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்றார். மாணவர் ராகுல் காந்த் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டா லின் தமது ட்விட்டர் பதிவில் மாண வர் ராகுல் காந்த் அவர்களின் கல்வி மீ தான ஆர்வமும் அவரது உழைப்பும் போற்றத்தக்கது; அவரை நான் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!. கல்வியின் முக்கியத்துவத்தை நான் ஒவ்வொரு முறை வலியுறுத்திப் பேசு வதும், நம்முடைய நீட் எதிர்ப்பு என்பதும் ராகுல் காந்த் போன்ற மாண வர்களின் வெற்றிக்காகத்தான்! அவ ருக்கு உதவ நமது அரசு இருக்கிறது. படிப்பு மட்டுமே நம்முடைய சொத்து! நிலையான புகழ்! தடை களைக் கடந்து படிப்போம்! படிப்பால் பெருமையடைவோம்! ராகுல் காந்தின் பெற்றோருக்குப் பாராட்டு கள்!” எனத் தெரிவித்துள்ளார்.