நாகர்கோவில், ஜூன் 2-நாகர்கோவில் -திருவனந்தபுரம் சாலையில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இதே வளாகத்தில்செயல்பட்டுவரும் மருத்துவக்கல்லூரியில் திருவண்ணாமலை மாவட்டம், ஓசூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தலோகேந்திரன் மகள் தனுஷியா (19), முதலாம் ஆண்டு கதிர்வீச்சியல் மருத்துவ தொழில்நுட்ப பிரிவில் சேர்ந்து பயின்றுவந்தார். இந்நிலையில் சனியன்று பிற்பகல் நீண்ட நேரமாகியும் அவரது அறைக்கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து, மற்றொரு மாணவி தனுஷியாவின் அறை ஜன்னல்வழியாக பார்த்த போது தனுஷியா தனது துப்பட்டாவை பயன்படுத்தி தூக்கில் தொங்கிய நிலையில் காணப் பட்டார்.இது குறித்த தகவலின்பேரில் தனியார் கல்லூரிக்கு வந்த நேசமணி நகர் காவல் துறையினர் மாணவியின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாணவியின் செல்போன் உள்ளிட்ட உடைமைகளையும் காவல்துறையினர் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.