கண்ணூர், ஜன. 2- கேரளாவில் முக்கிய ஊடகங்கள் வதந்தி பரப்புவதாக மாறிவிட்டன. தொழில்நுட்ப வசதிகள் வளர்ந்தாலும், இங்கு செய்திகள் வெளியிடுவது ஒருதலைப்பட்சமாகவே உள்ளது என பிரபல பத்திரிகையாளர் என்.ராம் கூறினார். ஆனால், ஒட்டுமொத்த ஊடகங்களையும் கேரளாவின் அனுப வத்தை வைத்து மதிப்பிடக் கூடாது என்றும் அவர் கூறினார். இந்திய நூலக காங்கிரஸின் ஒரு பகுதி யாக கண்ணூர் பல்கலைக்கழக வளா கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேருக்கு நேர் கூட்டத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு என்.ராம் பதிலளித்தார். அப்போது அவர், புலனாய்வு இதழியல் போஃபர்ஸ் காலத்தை விட ஆபத்தானதாகவும் சாகசமான தாகவும் மாறியுள்ளது என்றார். எண்பது களில் நானும் சித்ரா சுப்ரமணியமும் போஃபர்ஸ் ரகசியங்களை வெளியே கொண்டு வந்தபோது, நிர்வாகிகள் மற்றும் ஆளும் கட்சித் தலைவர்களின் தனித்தனி யான தலையீடுகள் இருந்தன. பிரதமர் ராஜீவ் காந்தி தலையிடவில்லை. பாது காப்பு அமைச்சர் கே.சி.பந்த் மற்றும் சில காங்கிரஸ் தலைவர்கள் வாபஸ் பெற வேண்டும் என்று கோரினர். இருப்பினும், மேற்கொண்ட பணியை தொடர எந்த தடையும் இல்லை.
அரசே நேரடியாகத் தலையிடுகிறது
இப்போது அப்படியில்லை. அரசு பெரு மளவில் தலையிடுகிறது. தி வயர் மீதான தாக்குதல் நம் முன்னால் உள்ளது. சித்திக் கப்பான் போன்ற உதாரணங்கள் ஏராளம். என்டிடிவி மீது என்ன ஒரு கொடூரமான தாக்குதல். அதிக ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட காலம் இது. தற்போதைய நிலைமையை அவசர நிலையுடன் ஒப்பிட முடியுமா என்று கேட்ட தற்கு, அவசரநிலைக் காலத்தில் ஊடகச் செயல்பாடுகள் இன்றுள்ளதை விட மோச மாக இருந்தது என்று பதிலளித்தார். தனிப் பட்ட எதிர்ப்புகள் இருந்தபோதிலும், பிர தான ஊடகங்கள் பொதுவாக ஆட்சிக்கு ஆதரவாக இருந்தன. எல்.கே.அத்வானி யின் வார்த்தைகளை கடன் வாங்கினால், பெரும்பாலான ஊடகங்கள், ஆட்சியாளர் கள் குனியச் சொன்னால் முழுங்கால் போட்டன. இன்று, சமூக ஊடகங்கள், டிஜிட்டல் ஊடகங்கள் போன்றவற்றால், எதிர்ப்பு வலுவாகவும் பரவலாகவும் உள்ளது. இதற்கு தி வயரே சிறந்த உதாரணம்.
உண்மையை உரத்த குரலில்...
இந்துத்துவா சர்வாதிகார ஆட்சி அனைத்து துறைகளிலும் பிடியை இறுக்கி உள்ளது. இது நீதித்துறைக்கு கூட சவா லாக உள்ளது. குடியரசு துணை தலைவரே நீதித்துறையை பகிரங்கமாக மிரட்டுகிறார். இருப்பினும், ஊடகவியலாளர்கள் நம்பிக்கை இழக்கக் கூடாது. இதய சுத்தியோடு உண்மையை முதலில் உரத்த குரலில் குறிப்பிட வேண்டும். அனைத்து சர்வாதிகார ஆட்சிகளும் வீழ்ந்ததையே வரலாறு காட்டுகிறது. நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்எல்ஏ கே.வி.குஞ்ஞிராமன் தலைமை வகித்தார்.